ஒற்றையாட்சிக்கு எதிராகவே வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் வாக்களித்துள்ளதாகத் தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இவ்வாறு தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 80,000 வாக்குகள் மாத்திரம் கிடைத்துள்ள போதிலும் சமஷ்டியை வலியுறுத்தும் தமிழ் தரப்புகளுக்கு 150,000 வாக்குகள் கிடைத்துள்ளதாகத் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.