ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் வகித்த அனைத்து பொறுப்புக்களிலிருந்தும் வெளியேறுவதாக அந்த கட்சியின் வவுனியா நிர்வாக செயலாளரும் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபன் இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தினை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அஞ்சல் மூலம் அனுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தனது பதவி விலகலுக்குக் கட்சியோ? அல்லது கட்சியின் தலைமையோ? பொறுப்பில்லை என்றும் இது தனது தனிப்பட்ட முடிவு எனவும் குலசிங்கம் திலீபன் தெரிவித்தார்.