சீரற்ற காலநிலை காரணமாக போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்ட யாழ் ஏ-9 வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஓமந்தை காவல்துறை பிரிவுக்குட்பட்ட நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகாமையில் உள்ள வீதியும் ஓமந்தை நகருக்கு அண்மித்த வீதியும் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதாக காவல்துறைப் பிரிவு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்று ஏ-9 வீதியில் பயணிக்கும் வாகனங்கள் வழமை போன்று பயணிக்க முடியும் எனவும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.