புதிய சபாநாயகராக டொக்டர் ஜகத் விக்ரமரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார். அசோக ரன்வல பதவி விலகியமையால் ஏற்பட்ட வெற்றிடத்திற்காக புதிய சபாநாயகராக டொக்டர் ஜகத் விக்ரமரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விக்ரமரத்னவின் பெயரை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய முன்மொழிய, சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க அதனை வழிமொழிந்தார்.