வவுனியா திருநாவற்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் முதியோர்கள் என தெரிவுசெய்யப்பட்ட 50 பேருக்கு லண்டனில் வசிக்கும் திரு தர்மலிங்கம் நாகராஜா அவர்களின் நிதியுதவியில் பால்மா பக்கற்றுகள் இன்று (15.12.2024) வழங்கிவைக்கப்பட்டன. மேற்படி நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தோழர் மோகன் (க.சந்திரகுலசிங்கம்), தோழர்கள் கண்ணதாசன், சந்திரன், ரூமி ஆகியோர் கலந்து கொண்டு உதவியினை வழங்கிவைத்தனர்.
