நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர், இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது, அவரை சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.