கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்துள்ள மதுபானசாலைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி கிளிநொச்சி பேருந்து சாலை சந்தியில் ஆரம்பமாகி மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஜனாதிபதிக்கு கையளிப்பதற்கான மகஜர் ஒன்றும் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரனிடம் கையளிக்கப்பட்டது.