இந்திய துணைத் தூதுவர் சிறி சாய் முரளிக்கும், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகத்துக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு இன்று காலை இடம்பெற்றுள்ளது. இதன்போது, இந்திய அரசாங்கத்தால் வடக்கு மாகாணத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.