கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தியின் தாயும், சகோதரரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் இன்று பிரசன்னப்படுத்தப்பட்ட போது காவல்துறையினர் இந்த விடயத்தை நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

கொலை சம்பவம் தொடர்பான தகவல்களை மறைத்ததற்காகவும், அதற்கு உதவி செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் நீர் கொழும்பு, கட்டுவெல்லேகம பகுதியைச் சேர்ந்த 23 வயதான பிங்புர தேவகே சமிது திவங்க மற்றும் 48 வயதான சேசத்புர தேவகே சமந்தி ஆவர்.

அத்துடன் குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாகத் தெரிவித்து இதுவரை 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.