முன்னாள் சபாநாயகர்கள் உட்பட பல அதிகாரிகள் தங்கள் பதவிக் காலத்தில் பயன்படுத்திய வாகனங்கள் மற்றும் எரிபொருள் தொடர்பான பல செலவு அறிக்கைகளை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். 2024 ஆம் ஆண்டு நவம்பர் வரை சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் 70 ஊழியர்கள் இருந்ததாக சபை முதல்வர் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் செப்டம்பர் 24 ஆம் திகதி வரை, முன்னாள் சபாநாயகர் 9 வாகனங்களைப் பயன்படுத்தியதாகவும், அந்த 9 மாத காலத்தில் மட்டும் எரிபொருளுக்காக 3.34 மில்லியன் ரூபாய் செலவாகியுள்ளதாகவும் பிமல் ரத்நாயக்க கூறினார்.
முன்னாள் பிரதி சபாநாயகர் 06 வாகனங்களைப் பயன்படுத்தியதாகவும், 9 மாதங்களுக்கு 135 இலட்சம் ரூபாயை எரிபொருளுக்காக செலவிட்டதாகவும் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பிரதிக் குழுக்களின் தலைவர் 4 வாகனங்களைப் பயன்படுத்தியதோடு அதற்காக 72 இலட்சம் ரூபாயை எரிபொருளுக்காக செலவிட்டுள்ளார் என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.