எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில், பொத்துவில், காரைதீவு ஆகிய பிரதேச சபைகளுக்கான கட்டுப் பணத்தை நேற்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் அம்பாறை மாவட்ட தேர்தல் முகவர் திரு. ஹென்றி மகேந்திரன் அவர்கள் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தி வேட்புமனுப் பத்திரங்களை பெற்றுக் கொண்டார். இதேவேளை இன்று காலை சுப வேளையில் காரைதீவு பிரதேச சபையின் முதன்மை வேட்பாளராக போட்டியிடுவதற்கு கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் திரு ப, ரவிச்சந்திரன் (சங்கரி) அவர்கள் வேட்புமனுவில் கையெழுத்திட்டார்.
 