முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் களனி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மில்ரோய் பெரேரா ஆகியோரைக் கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இராஜங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தொடர்ந்தும் தலைமறைவாகியுள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.