முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி நாட்களில் அங்கிருந்து காயப்பட்ட மக்களை வவுனியா வைத்தியசாலையில் கொண்டு வந்து குவித்த வண்ணமும் அங்கிருந்து முகாம்களுக்கு அனுப்பிய வண்ணமும் இருந்தார்கள் மருத்துவ உதவி நிறுவனங்களும், தொண்டர்களும் இராணுவத்தினரும். இக்கால கட்டத்தில் புளொட் தோழர்கள் வைத்தியசாலையிலும் முகாங்களிலும் இருந்த மக்களுக்கு தம்மால் இயன்ற உணவு வசதிகளையும் வேறு அத்தியாவசிய தேவை வசதிகளையும் செய்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

கழகத்தின் வெளிநாட்டுக் கிளைகளும் , தனிநபர்களாக தோழர்களும் உதவிகளை செய்திருந்தார்கள்.
மேலும் போரின் கடைசித் தருணங்களில் வவுனியாவில் கொண்டுவந்து குவிக்கப்பட்ட மக்களுக்கு புளொட் தோழர்கள் மக்களிடமும் வியாபார நிறுவனங்களிடமும் பெற்ற உதவியைக் கொண்டு உணவு சமைத்து பசியாற்றினார்கள்.