இதன்போது அடுத்த மாதம் நடைபெறவுள்ள சபைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசியப் பரப்பில் இருககும் கட்சிகள் ஆட்சியமைக்க வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாடும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் 106 ஆசனங்களை வடக்கு – கிழக்கு பகுதிகளில் பெற்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏனைய தமிழ் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது எனவும்
பல்வேறு சபைகளில் ஏனைய தமிழ் தேசிய கட்சிகளான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழரசுக் கட்சி பெரும்பான்மை பெற்ற இடங்களில் அக் கட்சிகள் ஆட்சி அமைக்க ஆதரவு வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது