 18.06.2021 இல் கனடாவில் மரணித்த யாழ் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டவரும், கழகத்தின் ஆரம்பகால உறுப்பினருமான தோழர் ராசா (முருகேசு சத்தியநாதன்) அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாள் இன்று… இவர் கழகத்தின் உரும்பிராய் பிரதேச அமைப்பாளராக இருந்த காலங்களில், கழகத்தின் இராணுவ செயற்பாடுகளில் மாத்திரமன்றி வெகுஜன அமைப்புகளை உருவாக்குவதிலும் அவற்றை பலப்படுத்துவதிலும் கடுமையாக உழைத்தார்.
18.06.2021 இல் கனடாவில் மரணித்த யாழ் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டவரும், கழகத்தின் ஆரம்பகால உறுப்பினருமான தோழர் ராசா (முருகேசு சத்தியநாதன்) அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாள் இன்று… இவர் கழகத்தின் உரும்பிராய் பிரதேச அமைப்பாளராக இருந்த காலங்களில், கழகத்தின் இராணுவ செயற்பாடுகளில் மாத்திரமன்றி வெகுஜன அமைப்புகளை உருவாக்குவதிலும் அவற்றை பலப்படுத்துவதிலும் கடுமையாக உழைத்தார்.
செயலதிபர் மீது மிகுந்த பற்றும் விசுவாசமும் கொண்ட இவர் எந்நேரமும் எளிமையாகவே தோற்றமளிப்பார். தோழர்களுக்கு அரசியல் வகுப்புகளை நடத்தி அவர்களை அரசியல் ரீதியில் வளர்த்தெடுப்பதிலும் மிகுந்த அக்கறை காட்டினார்.
புலிகளின் நடவடிக்கைகளால் கழகம் தனது செயற்பாடுகளை தளத்தில் தற்காலிகமாக நிறுத்தும்வரை கழக செயற்பாடுகளில் தன்னை மிகத்தீவிரமாக ஈடுபடுத்தியிருந்தார்.
இவரது சகோதரர் 1988ஆம் ஆண்டில் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போதுகூட துவண்டு விடாமல் ஏனைய தோழர்களை அவர் பாதுகாத்து நின்றதை இத்தருணத்தில் நினைவு கூருகின்றோம்.
பின்னர் அவர் கனடா சென்று வாழ்ந்தபோதும் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடிந்த உதவிகளை செய்யவேண்டுமென்பதிலும் எதிர்கால தலைமுறையினரின் கல்வியறிவை மேம்படுத்த வேண்டுமென்பதிலும் கவனம் செலுத்தியிருந்தார்.
இவர் 18.06.2021 இல் கனடாவில் இடம்பெற்ற விபத்தொன்றில் அகாலமரணமானார்.
