நிகழ்நிலை காப்பு சட்டத்தில் (Online Safety Bill) சபாநாயகர் கையொப்பமிட்டமையை சவாலுக்குட்படுத்தி ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் தாக்கல் செய்த இந்த மனு ப்ரியந்த ஜயவர்தன, ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கப்புலி ஆகிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. உயர் நீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகளுக்கு முரணாக சபாநாயகர் நிகழ்நிலை காப்பு சட்டத்தில் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் இந்த அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்திருந்தார். Read more