Posted by plotenewseditor on 30 April 2024
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 30 April 2024
Posted in செய்திகள்
மே தினத்தை முன்னிட்டு இன்று முதல் விசேட பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு நகரம் உள்ளிட்ட மே தின பேரணிகள் முன்னெடுக்கப்படும் பகுதிகளை மையப்படுத்தி இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்தூவ குறிப்பிட்டார். சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுவதற்கு பிரதான அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. Read more
Posted by plotenewseditor on 30 April 2024
Posted in செய்திகள்
பிரதம நீதியரசர் தவிர உயர் நீதிமன்ற நீதியரசர்களை நியமிக்கவோ அல்லது பரிந்துரைக்கவோ ஜனாதிபதிக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில், ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றத்தினால் இந்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்னவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிப்பதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை நிராகரித்து, Read more
Posted by plotenewseditor on 30 April 2024
Posted in செய்திகள்
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை ஊழல் வழக்கொன்றிலிருந்து விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று உத்தரவிட்டார். அமைச்சராக செயற்பட்ட சந்தர்ப்பத்தில் முறையற்ற விதத்தில் ஈட்டிய 274 இலட்சம் ரூபா பணத்தினூடாக பொரளை கின்சி வீதியில் அதிசொகுசு வீடொன்றை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில், மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. Read more
Posted by plotenewseditor on 29 April 2024
Posted in செய்திகள்
டிரான் அலஸை உடனடியாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 29 April 2024
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 29 April 2024
Posted in செய்திகள்
இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இப்போது உள்ள யாப்பின் படி சத்தியலிங்கம் பொதுச்செயலாளர் என வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், துரைராசசிங்கம் பதவி விலகியதால் பொதுச்செயலாளர் பதவி வெற்றிடமானது. யாப்பின் படி வெற்றிடம் நிரப்பப்பட்டுள்ளது. இதற்கமைய சத்தியலிங்கம் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை பதில் பொதுச்செயலாளராக சுமந்திரன் இருக்கிறார். ஆனால் எவ்வாறான சந்தர்ப்பங்களில் பதில் பொதுச்செயலாளர் தமது அதிகாரங்களை பயன்படுத்த வேண்டும் என்ற வரையறைகள் உள்ளன. Read more
Posted by plotenewseditor on 29 April 2024
Posted in செய்திகள்
ஜப்பானின் (Japan) வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா (Yoko Kamikawa) மிக விரைவில் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அவர், எதிர்வரும் மே மாதம் 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார். Read more
Posted by plotenewseditor on 29 April 2024
Posted in செய்திகள்
நீண்ட காலமாக இல.01, 03ஆம் குறுக்குத்தெரு யாழ்ப்பாணம் எனும் முகவரியில் இயங்கி வந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகம் புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 01ஆம் (01.05.2024) திகதியிலிருந்து இல.42 கோவில் வீதி, யாழ்ப்பாணம் (42,Temple Road, Jaffna) முகவரிக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 29 April 2024
Posted in செய்திகள்
நாடளாவிய ரீதியில் தற்போது பணியில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் சுகவீன விடுமுறையை அறிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது போக்குவரத்து மற்றும் காகிதாதிகள் உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் அனுராத செனவிரத்ன தெரிவித்துள்ளார்.