ஐக்கிய அரபு இராச்சியத்தில் பல்வேறு சிறைச்சாலைகளில் தண்டனை பெற்றுவந்த 44 இலங்கையர்களுக்கு அந்த நாட்டு அரசாங்கத்தினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் 52ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு கடந்த 2ஆம் திகதி அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் பொதுமன்னிப்பு பெற்று சிறைச்சாலைகளிலிருந்து விடுதலையான 44 இலங்கையர்களையும் மீள நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.