வட மாகாணத்தில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் பணிபுரியும் கடவை காப்பாளர்கள் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சம்பள அதிகரிப்புக் கோரியும், நிரந்தர நியமனத்தை வலியுறுத்தியும் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரயில் கடவை காப்பாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் அவதானமாக ரயில் பாதையை கடக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.