பொதுநலவாய நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் தலைமை அதிகாரிகளின் 27ஆவது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உகண்டாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இதன்போது, உகண்டா ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் உத்தியோகப்பூர்வ கலந்துரையாடலில் சபாநாயகர் ஈடுபட்டுள்ளார். இதன்போது இரண்டு நாடுகளுக்கிடையிலான உறவுகளை பலப்படுத்தும் பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.