வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நிரந்தரமாக இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலின் போது வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இராணுவ முகாம் அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றன. அதன் பின்னரும் குறித்த முகாம் அகற்றப்படாத நிலையில் இராணுவத்தினர் கடமையில் தொடர்ந்தும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் நேற்றிரவு கனரக வாகனங்களில் வருகைத் தந்த இராணுவத்தினர் குறித்த பகுதியில் பாரிய அளவிலான இராணுவ முகாம் ஒன்றை அமைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பயணிகளும், பொதுமக்களும் பாரிய அசௌகரியங்களை சந்தித்துள்ளதாக விசனம் தெரிவிக்கின்றனர்.