Header image alt text

11.01.1987இல் யாழ்ப்பாணத்தில் மரணித்த கழகத்தின் தளப் பொறுப்பாளர் தோழர் மென்டிஸ் (அரியராஜசிங்கம் விஐயபாலன் – யாழ்ப்பாணம்) அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று… கழகத்தின் சிறந்த பயிற்சி ஆசிரியரான தோழர் மென்டிஸ் அவர்கள், இராணுவப் பயிற்சி அளிப்பதிலும், அரசியல் ரீதியில் இளைஞர்களை வளர்ப்பதிலும் அதீத அக்கறை காட்டி வந்தார். யாழ். மாவட்ட இராணுவப் பொறுப்பாளராகவும் பின்பு தள இராணுவப் பொறுப்பாளராகவும் செயற்பட்டிருந்த இவர் மிகச் சிறந்த போர் வீரனாகத் திகழ்ந்தார். இயக்கங்களுக்கு இடையிலான முரண்பாடுகளைக் களையும் செயற்பாடுகளில் இவர் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவை இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் தெரிவித்தார். ஜனவரி 21 ஆம் திகதி திருகோணமலையில் இதற்கான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக  அவர் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டம்,  அக்கட்சியின் சிரேஷ்ட தலைவரான இரா. சம்பந்தனின் இல்லத்தில் நேற்று (10) நடைபெற்றது. Read more

ஜப்பான் நிதியமைச்சர் Shun’ichi Suzuki இன்று (11) பிற்பகல் நாட்டிற்கு வருகை தந்தார். அவர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வௌியுறவு அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்டோரை ஜப்பான் நிதியமைச்சர் Shun’ichi Suzuki சந்திக்கவுள்ளார். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனினால், ஜப்பான் நிதியமைச்சர் Shun’ichi Suzuki உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று(10) சமர்ப்பிக்கப்பட்டது. பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலத்தை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த கால அவகாசம் வழங்கப்பட்டு, அதன் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் முன்னெடுக்கப்படுமென நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்தார். இதனிடையே, பெறுமதிசேர் வரிக்கு(VAT) உள்ளாக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைமாற்றம் இதுவரை சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். S.M.மரிக்கார் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியிலுள்ள பொலிஸ் காவலரண் அமைந்துள்ள காணி மீது நேற்றிரவு பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், இதனால் காவலரணுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். 04 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதுடன் அதில் ஒன்று வீதியிலும் ஏனைய 3  குண்டுகள் பொலிஸ் காவலரண் அமைந்துள்ள காணி மீதும் வீழ்ந்துள்ளன. இவற்றில் ஒன்று மாத்திரமே தீப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர். மண்டைதீவு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பின் போது 1,200 மில்லிகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். Read more