பாடசாலைகளின் 2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 05 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. உயரதரத்தின் விவசாய விஞ்ஞானப் பாட பரீட்சையை எதிர்வரும் முதலாம் திகதி நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு முன்னர் அறிவித்திருந்தது. பரீட்சைக்கு முன்னர் வினாத்தாளில் சில கேள்விகள் வௌியாகியமையால் உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞானப் பாடத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் பகுதி வினாத்தாள்களுக்கான பரீட்சையை மீள நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் பகுதி எதிர்வரும் முதலாம் திகதி வியாழக்கிழமை காலை 08.30 முதல் 11.40 வரை நடைபெறவுள்ளது.

முதலாம் பகுதி அன்றைய தினம் பிற்பகல் 1 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இடம்பெறவுள்ளது.