நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட தபாலகங்களில் வாகன அபராதத் தொகையை செலுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்த தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. தற்போது மேல் மாகாணத்தில் இரவு நேர தபாலகங்களில் அபராதப் பணத்தை செலுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த முயற்சி வெற்றியளித்ததையடுத்து, ஏனைய மாகாணங்களிலும் இதே நடவடிக்கைளை முன்னெடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்கு முன்னர் இதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பப்டுமென தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.