நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார உயர்நீதிமன்றில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அல்லது பொது வாக்கெடுப்பு மூலம் குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றுமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.