25.01.1999இல் யாழ்ப்பாணத்தில் மரணித்த தோழர் சதீஸ் (தில்லைநாதன் சந்திரமோகன்) அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று…
Posted by plotenewseditor on 25 January 2024
Posted in செய்திகள்
25.01.1999இல் யாழ்ப்பாணத்தில் மரணித்த தோழர் சதீஸ் (தில்லைநாதன் சந்திரமோகன்) அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று…
Posted by plotenewseditor on 25 January 2024
Posted in செய்திகள்
கழகத் தோழர் லதன் (முத்தையா யோகராசன் – திருகோணமலை) அவர்கள் நேற்று (24.01.2024) மரணமெய்தினார் என்பதை மிகுந்த துயருடன் பகிர்ந்து கொள்கிறோம்.Posted by plotenewseditor on 25 January 2024
Posted in செய்திகள்
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க தமிழக பக்தர்கள் இன்று முதல் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா அடுத்த மாதம் 23, 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா இரு நாட்டு மீனவர்களும் ஒரே இடத்தில் சந்திக்கும் நிகழ்வாக வருடாந்தம் நடைபெற்று வருகின்றது. இலங்கையில் இருந்து 4,000 பேரும் தமிழகத்தில் இருந்து 4,000 பேரும் என மொத்தம் 8,000 பேர் இம்முறை திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 25 January 2024
Posted in செய்திகள்
அதிக வரையறைகளை விதிக்கும், தௌிவற்ற சட்டங்கள் மூலம் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி பாதிக்கப்படும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். அவை முதலீடுகளையும் டிஜிட்டல் பொருளாதார அபிவிருத்தியையும் பாதிக்கும் எனவும் அவர் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தொடர்பில் X தளத்தில் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார். இந்த சட்டத்திருத்தம் மூலம் கருத்து சுதந்திரம், புத்தாக்கம் மற்றும் தனியுரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் சிவில் சமூகமும் தொழில்நுட்ப நிறுவனங்களும் அடங்கலாக பிரதான தரப்பினர் முன்வைத்த முக்கிய விடயங்கள் உள்வாங்கப்படவில்லையெனவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 25 January 2024
Posted in செய்திகள்
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் கைதிகள் சிலர் தப்பியோடியுள்ளனர். தப்பியோடியவர்களில் சிலர் புனர்வாழ்வு நிலையத்தில் சரணடைந்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். எவ்வாறாயினும், மேலும் சிலர் காணாமற்போயுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தப்பிச்சென்ற 25 கைதிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. Read more