Posted by plotenewseditor on 29 January 2024
Posted in செய்திகள்
பகிடிவதைகள் தொடர்பான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், சந்தேகநபர் ஒருவருக்கு சுமார் 12 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்குவதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில், இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த நிலையில் 166,998 பேர் இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு தகுதிப்பெற்றிருந்தனர். அவர்களில் 84, 150 பேர் பல்கலைக்கழகங்களுக்கான அனுமதிக்காக விண்ணப்பித்திருந்தனர். Read more