Posted by plotenewseditor on 10 January 2024
Posted in செய்திகள்
வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களில் நிலவும் மழையுடனான வானிலை நாளை (11) முதல் குறைவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மாலை வேளைகளில் மேல், மத்திய, மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. Read more