Header image alt text

ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி புனரமைப்பு திட்டத்தின் கீழ், தற்போது புனரமைப்பு பணிகள் பிற்போடப்பட்டுள்ள வீதிகளில் இந்த ஆண்டில் 15 ஆயிரம் கிலோமீற்றர் வீதிகளை போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் மேம்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முழுமையான செலவு 20 பில்லியன் ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டில், 6 மாதங்களில் குறித்த பணிகளை பூர்த்திசெய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, ஆண்டின் முதல் 6 மாதங்களில், தெரிவுசெய்யப்பட்டுள்ள வீதிகளை போக்குவரத்துக்கு ஏற்புடைய வகையில் புனரமைப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பகுதியில் சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் மேன்முறையீடுகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் திகதியிட்டுள்ளது. இந்த மேன்முறையீட்டு மனுக்கள் நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டது. Read more

துயர் பகிர்வு

Posted by plotenewseditor on 8 January 2024
Posted in செய்திகள் 

அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்ப உறவுகளோடு, நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொள்கிறோம்.

கடந்த ஆண்டு இறுதியில் கொள்கையளவில் உடன்பாடு எட்டப்பட்டதன் பின்னர், கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இலங்கைக்கும் கடன் வழங்குநர் நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விரைவில் கைச்சாத்திட வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜப்பான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஜப்பான் விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. அதேநேரம், உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுக்கு வெளியே கடன் வழங்குநர்களுடனான ஒப்பந்தங்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒப்பீட்டுத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டியதன் தேவைப்பாடும் உள்ளதாக ஜப்பான் சுட்டிக்காட்டியுள்ளது.

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, முல்லைத்தீவில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு புனித இராஜப்பர் தேவாலயத்திற்கு முன்பாக ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணியானது, முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டு அங்கு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. காவல்துறையின் கைது நடவடிக்கைகளுக்கு எதிராகவும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், பதாகைகளை ஏந்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக இலங்கை வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஷெனூகா செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் தமது பணிகளை தொடங்குவதற்கு முன்னதாக இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை அவர் சந்தித்து தமது நற்சான்று பத்திரங்களை கையளித்துள்ளார். முன்னதாக ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை பிரதிநிதியாகவும் பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகராகவும் தாய்லாந்துக்கான தூதுவராகவும் ஷெனுகா செனவிரத்ன பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய செங்கடல் மற்றும் அதனை அண்மித்த பிராந்தியத்திற்கு இலங்கை கடற்படையின் கப்பல்களை அனுப்பிவைக்க தயார் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இந்த கப்பல்கள் ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் முன்னெடுக்கப்படும் Prosperity Guardian நடவடிக்கையில் இணைக்கப்படவுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர், கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார். கப்பலை அனுப்பிவைக்க வேண்டிய திகதி தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். Read more

வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றாவின்  விளக்கமறியல் வெள்ளிக்கிழமை (12) வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஆண்டு 05ம் திகதி வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டு நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற வன்னி மாவட்டங்களிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். இதன்போது வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்ட நிலையில் அச்சங்கத்தின் தலைவி உட்பட இருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் கைதுசெய்யப்பட்டவர்கள் அன்றையதினம் மாலை நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்டனர். Read more

07.01.2015இல் மரணித்த தோழர் வசந்தன் (சுந்தரலிங்கம் வசந்தலிங்கம் – கோவில்புதுக்குளம்) – வவுனியா இலங்கை போக்குவரத்துக் கழக (CTB) முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளர்) அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள் இன்று…

திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதேவேளை, 2024 ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 9ஆம் திகதி முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. கடந்த டிசெம்பர் மாதம் 12ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய நாடாளுமன்ற விவகாரக் குழு இதனை தீர்மானித்திருந்தது. அதன்படி, எதிர்வரும் 9 ஆம் திகதி காலை 09.30 மணி முதல் 10.30 வரை வாய்வழி வினாவுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. Read more