Header image alt text

கனடா ரொரன்ரோவில் வதியும் கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த செல்வி தயாபரன் சுவேதிகா அவர்கள் தனது 23 வது பிறந்தநாளை முன்னிட்டு தாலிக்குளம் உதயசூரியன் முன்பள்ளியைச் சேர்ந்த 18 சிறார்களுக்கு இருபதினாயிரம் ரூபா பெறுமதியிலான கற்றல் உபகரணங்களை, புளொட் அமைப்பின் சமூக மேம்பாட்டுப் பிரிவு மூலம் வழங்கியுள்ளார்.

Read more

யாழ் தேசிய கல்வியியல் கல்லூரியில் பிரதான மண்டபத்திற்கு கல்லூரிக்கான காணி வழங்கிய குடும்பத்தவர்காளான சரஸ்வதி தர்மலிங்கம் அவர்களின் நாமம் பொறிக்கப்பட்ட போது….. Read more

தோழர்கள் மாமா (கணபதிப்பிள்ளை பாக்கியராஜா), கரிகாலன் ( இராஜரட்ணம் ராஜேந்திரன்) ஆகியோரின் 17ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு சுவிஸ் நாட்டில் வசிக்கும் தோழர் சித்தன் (சதாசிவம் சித்திரவேல்) அவர்களால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழுகின்ற தெரிவுசெய்யப்பட்ட பதினொரு குடும்பங்களுக்கு தலா 10,000/- ரூபாய் நிதியுதவி வழங்கிவைக்கப்பட்டது. இவ்வுதவியை கட்சியின் துணைத்தலைவர் தோழர் கேசவன் அவர்கள் வழங்கிவைத்தார்.

Read more

05.01.1996 ஆம் ஆண்டு வவுனியாவில் மரணித்த தோழர் அர்ச்சுணா (சிங்கராஜா நேசராஜா) அவர்களின் 28ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.

05.01.1988 ஆம் ஆண்டு கல்நாட்டினகுளத்தில் மரணித்த கழகத்தின் முன்னாள் தென்மராட்சி பொறுப்பாளர் தோழர் ரகு (கண்ணாடி ரகு – கொக்குவில்) அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

வவுனியாவில் இன்று (05) நடைபெற்ற வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் பங்கேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரி வவுனியா மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள்  கவனயீர்ப்பு போராட்டத்தை இன்று முன்னெடுத்தனர். இதன்போது, ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரில்  ஒருவர்  எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மற்றையவர் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் அரசாங்கம் தலையீடு செய்யாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது என்பதால், அரசாங்கம் இதில் தலையீடு செய்யாதென அவர் கூறியுள்ளார். அதேபோன்று, அதிகாரப் பகிர்வு என்பது ஒரு அரசியல் எண்ணக்கருவாக மாத்திரம் அன்றி, பொருளாதார அடிப்படையிலும் யதார்த்தமாக அமைய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. Read more

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 11 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளது. கடன் சலுகை வழங்கப்பட்டதையடுத்து, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக இந்த குழு நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் TIN எனப்படும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை பெறும் நோக்குடன் விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை கடந்த வருடத்தை காட்டிலும், இந்த வருடத்தில் 10 சதவீதமாக அதிகரித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் மாத்திரம் 3 இலட்சத்து 35 ஆயிரம் பேருக்கு TIN எனப்படும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் வழங்கப்பட்டுள்ளதாக அதன் பிரதி ஆணையாளர் நாயகம் சமன் சாந்த தெரிவித்துள்ளார். Read more

04.01.1990 இல் மரணித்த தோழர் தேவன் (கிருஸ்ணப்பிள்ளை செல்வராஜா – புங்குடுதீவு) அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…