04.01.1985 ஆம் ஆண்டு மரணித்த தோழர் இ.ரவிசேகரன் (மாணவர் பேரவை) அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.
Posted by plotenewseditor on 4 January 2024
Posted in செய்திகள்
04.01.1985 ஆம் ஆண்டு மரணித்த தோழர் இ.ரவிசேகரன் (மாணவர் பேரவை) அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.
Posted by plotenewseditor on 4 January 2024
Posted in செய்திகள்
வடக்கில் காணி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் வடக்கு மாகாணத்தில் காணி விடுவிப்பு செயற்பாடுகளை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில் காணி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காணி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 4 January 2024
Posted in செய்திகள்
இந்தியாவின் தமிழகத்தில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட 25 அடி உயர திருவள்ளுவர் சிலை நாளைய தினம் (05) திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த சிலையை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். திருவள்ளுவர் சிலை 3 தொன் எடையில் 25 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. விசேடமாக, இந்த சிலை முழுவதுமாக தமிழ் எழுத்துக்களால் அமைக்கப்பட்டு நெற்றியில் அறம் என்ற சொல் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சி வீதியின் குறிச்சிக்குளம் பகுதியில் இந்த திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 4 January 2024
Posted in செய்திகள்
வட மாகாணத்தில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் பணிபுரியும் கடவை காப்பாளர்கள் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சம்பள அதிகரிப்புக் கோரியும், நிரந்தர நியமனத்தை வலியுறுத்தியும் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரயில் கடவை காப்பாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் அவதானமாக ரயில் பாதையை கடக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Posted by plotenewseditor on 4 January 2024
Posted in செய்திகள்
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகளை 2025 ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பில் தற்போதுள்ள பிரச்சினை தொடர்வதற்கு இடமளிக்க முடியாது எனவும், ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். இதற்கமைய, இது தொடர்பில் திட்டமொன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். Read more
Posted by plotenewseditor on 3 January 2024
Posted in செய்திகள்
வட்டுக்கோட்டை காவல்துறையினரின் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் இளைஞரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வரின் விளக்கமறியலில் எதிர்வரும் 16ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் நீதவான் நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று (02) எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது குறித்த இளைஞனின் பிரேத பரிசோதனை அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. Read more
Posted by plotenewseditor on 3 January 2024
Posted in செய்திகள்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன்களை உற்பத்தி செய்த 180 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கழிவு முகாமைத்துவ பிரிவின் பொறுப்பதிகாரி அஜித் வீரசுந்தர தெரிவித்தார்.
Posted by plotenewseditor on 3 January 2024
Posted in செய்திகள்
பெறுமதி சேர் வரியை (VAT) அதிகரிப்பதே அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான மாற்று வழி என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். தவறான பொருளாதார தீர்மானங்களை எடுப்பதன் மூலம் ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடையும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சிலர் கூறுவது போன்று பிரபலமான தீர்மானங்களை மேற்கொண்டு நாட்டின் எதிர்காலத்தை இருளடையச் செய்ய தாம் தயாரில்லை எனவும் குறிப்பிட்டார். சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில் இன்று இடம்பெற்ற “ஷில்ப அபிமானி 2023” எனும் கைவினைப் பொருட்கள் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டார். Read more
Posted by plotenewseditor on 3 January 2024
Posted in செய்திகள்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மற்றுமொரு பயணிகள் முனையத்தை நிர்மாணிப்பதற்கு துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. விமான நிலையத்தில் நிலவும் பயணிகள் நெரிசலை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
Posted by plotenewseditor on 2 January 2024
Posted in செய்திகள்
02.01.1982 இல் மரணித்த புளொட் அமைப்பின் ஸ்தாபகர்களுள் ஒருவரும்,’புதிய பாதை’ ஆசிரியரும், கழகத்தின் முதலாவது தளபதியுமான தோழர் சுந்தரம் (சதாசிவம் சிவசண்முகமூர்த்தி – சுழிபுரம்) அவர்களின் 41ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.