வெளிநாட்டில் காவல்துறை உத்தியோகத்தருக்கான அதியுயர் பதவியைப் பெற்ற முதல் இலங்கையர் என கருதப்படும் நிஷான் துரையப்பா அண்மையில் இலங்கை வந்துள்ளார். கனடாவின் பீல் பிராந்திய காவல்துறை பிரிவின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ள இவர், இலங்கையில் அனைவராலும் பேசப்பட்ட யாழ்ப்பாணத்தின் முன்னாள் நகராதிபதியான அல்பிரட் துரையப்பாவின் மருமகனாவார். 2019 ஆம் ஆண்டு முதல் கனடாவின் பீல் மாகாணத்திற்கு பொறுப்பான காவல்துறை மா அதிபராக கடமையாற்றி வரும் நிஷான் துரையப்பா இலங்கையில் பிறந்தவர் என்ற வகையில் தமிழ் மக்களுக்கும் இலங்கைக்கும் பெரும் மரியாதையை வழங்கியவர். Read more
2024 ஜனவரி மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பதிவு இலக்கமான TIN இலக்கத்தினை பெற்றுக்கொள்ள வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் வரி செலுத்துவோருக்கான பதிவு இலக்கத்தை (TIN) பெறாத நபர்களுக்கு 50,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை இலக்கமொன்று இருப்பதை போலவே TIN இலக்கம் இருக்க வேண்டியதும் அவசியமாகும்.
கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அபிமானிகள் அனைவருக்கும் இனிமையான புதுவருட வாழ்த்துக்கள். கடந்து சென்ற வருடத்தில், தங்கள் பங்களிப்பில் மேற்கொள்ளப்பட்ட செயற்திட்டங்கள் மூலம், தேவைக்குரிய தாயக மக்களின் மேம்பாட்டுக்கு ஒரு பாலமாக செயற்பட்டிருந்தோம். எமது கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட ஏராளமான மக்கள் நாளாந்தம் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வை பெற்றுக் கொடுக்க முடியாவிடினும் கட்சியின் நிர்வாக நடைமுறைகளுக்கு இணங்கி இயன்றளவு செயற்பட்டுள்ளோம்.
01.01.1990 ஆம் ஆண்டு முசல்குத்தியில் மரணித்த தோழர்கள் சாம் முருகேசு, உடுவெரகே ஹென்ரி பெரேரா, வை.திருச்செல்வம் (சந்திரன்), சக்திவேல், கார்லோஸ், சந்தனம், ரவீந்திரன், கரிகாலன், சைமன், (பஞ்சாபி), கங்கா, தவம், பெரியதம்பி, சதீஸ், பிள்ளை, தயாளன், பரட்டைவிமல்(சண்முகம் விமல்), டொக்டர், சுரேஷ், ரமேஸ் (ரமேஸ்வரன்), நேசன் (செல்லத்துரை லோகநாதன்), ரவி சுந்தர்ராஜ் ரவி உள்ளிட்ட தோழர்களினதும், இதனைத் தொடர்ந்து மரணித்த காந்தீயம் அமைப்பில் செயற்பட்ட திருமதி ராமசந்திரன் ராசம்மா அவர்களினதும் 33ம் ஆண்டு நினைவுகள்!
வவுனியாவில் இந்தியா அரசினால் மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசியில் 1,276 கிலோகிராம் பதுக்கப்பட்டமை தொடர்பான விசாரணையானது இது வரை முடிவுறாத நிலையில் காணப்படுகின்றமை தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக தெரியவந்துள்ளது. கடந்த வருடம் டிசம்பர் 29 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளின் விபரத்தினை வவுனியா பிரதேச செயலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட போது, குறித்த விடயம் தொடர்பாக மாவட்ட செயலகத்தால் விசாரணை நடாத்தப்பட்டு வருவதாகவும், இவ் விசாரணை தொடர்பான விபரங்கள் பிரதேச செயலகத்திற்கு கிடைக்கப்பெறவில்லை என பிரதேச செயலகம் தெரிவித்துள்ள நிலையில் மாவட்ட செயலகத்தால் விசாரணை அறிக்கை கிடைக்கப்பெற்றால் குறித்த விடயத்திற்கான நடவடிக்கைகள் தொடர்பில் தகவல் வழங்க முடியும் என வவுனியா பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் பல்வேறு சிறைச்சாலைகளில் தண்டனை பெற்றுவந்த 44 இலங்கையர்களுக்கு அந்த நாட்டு அரசாங்கத்தினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் 52ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு கடந்த 2ஆம் திகதி அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் பொதுமன்னிப்பு பெற்று சிறைச்சாலைகளிலிருந்து விடுதலையான 44 இலங்கையர்களையும் மீள நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.