இலங்கை தமிழரசுக் கட்சியின் 17ஆவது தேசியமாநாடு திட்டமிட்ட வகையில் இடம்பெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டபடி தேசிய மாநாடு ஜனவரி மாதம் 27, 28ஆம் நாட்களில் நடைபெறும். தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் இந்த மாநாடு மு.ப.10 மணிக்கு நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார். இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.