இலங்கைக்கும் – பெனின் குடியரசுக்கும் இடையில் நிலவும் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பெனின் குடியரசின் உப ஜனாதிபதிக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அத்துடன், பருத்தி ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள பெனின் குடியரசு, குறித்த தொழிற்துறையில் முதலீடு செய்வதற்கான இலங்கை முதலீட்டாளர்களை பரிந்துரைக்குமாறு அந்த நாட்டின் உப ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இதன்போது, இராஜதந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு விசா விலக்கு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் இலங்கைக்கும் பெனின் குடியரசுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.