உகண்டா – கம்பாலா நகரில் நடைபெறும் ஜீ 77 மற்றும் சீனாவின் 3ஆவது தென் துருவ மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் உரையாற்றியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜீ 77 உறுப்பு நாடுகளின் வளர்ச்சி சவால்கள் மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு பணிகள் குறித்து இந்த மாநாட்டின்போது கலந்துரையாடப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக உகண்டாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அந்த நாட்டு ஜனாதிபதி யொவேரி முசேவேனியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சரிவடைந்திருந்த நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தை, உகண்டா ஜனாதிபதி இந்த சந்திப்பின்போது பாராட்டியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.