கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அனுமதியற்ற விதத்தில் தங்கியிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொண்ட சோதனையின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களில் 4 பேர் சட்ட விரோத தரகர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையள பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.