Header image alt text

ஏழாலை மேற்கு சைவ சன்மார்க்க வித்தியாலய மெய் வல்லுநர் போட்டி-

யாழ்ப்பாணம் ஏழாலை மேற்கு சைவ சனமார்க்க வித்தியாசாலையின் 2014ஆம் ஆண்டுக்கான மெய் வல்லுநர் போட்டி அண்மையில் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. ஏழாலை மேற்கு சைவ சன்மார்க்க வித்தியாசாலையின் அதிபர் பிரதா கிரிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் பா. கஜதீபன் அவர்களும் கலந்து கொண்டு இந்நிகழ்வினைச் சிறப்பித்திருந்தனர்.

08.02.2014 news put on 25.02.2014 Elaalai  (12)08.02.2014 news put on 25.02.2014 Elaalai  (10)08.02.2014 news put on 25.02.2014 Elaalai  (1)08.02.2014 news put on 25.02.2014 Elaalai  (2)08.02.2014 news put on 25.02.2014 Elaalai  (3)08.02.2014 news put on 25.02.2014 Elaalai  (4)08.02.2014 news put on 25.02.2014 Elaalai  (5)08.02.2014 news put on 25.02.2014 Elaalai  (9)

விசேட சட்டக்குழுவை நியமிக்குமாறு அமைச்சர்கள் கோரிக்கை-

இலங்கைமீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக ஐ.நா சபையின் விசேட நிபுணர்கள் குழுவொன்று நியமித்தல் தொடர்பான சர்வதேச சட்டத்தை ஆராய்ந்து அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கும் வகையில் விசேட சட்டக் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 6 அமைச்சர்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அறிக்கையொன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், தற்போது ஏற்பட்டுள்ள சர்வதேச நெருக்கடிகளுக்கு அமைய இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்படுமாயின் அதனை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்காக பொருளாதார விசேட நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றையும் நியமிக்குமாறு அவ்வமைச்சர்கள் கோரியுள்ளனர். அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர, நவீன் திஸாநாயக்க, ராஜித சேனாரத்ன, ரெஜினோல்ட் குரே மற்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகியோரே மேற்படி கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இலங்கையில் நீண்ட காலங்களுக்கு முன் சேவையாற்றிய இராஜதந்திரிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடலின் பின்னரே இவ்வமைச்சர்கள் மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்துளளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு நவிபிள்ளை பரிந்துரை-

இலங்கை தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை பரிந்துரைத்துள்ளார். இந்த பரிந்துரை அடங்கிய அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவிநீதம்பிள்ளை வெளியிட்டுள்ளார். சிலநாட்களுக்கு முன்னர் குறித்த அறிக்கையின் உள்ளடக்கத்தின் சில தரவுகள் ஊடகங்களில் கசிந்திருந்த நிலையில், தற்போது அறிக்கையின் முழுவடிவம் வெளிவந்துள்ளது. 18 பக்கங்கள் கொண்டுள்ளதான இந்த அறிக்கையின் முன்னுரையில், உள்நாட்டு விசாரணை பொறிமுறைகள் இலங்கையில் தோல்வியடைந்ததுள்ள நிலையில், சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கான பொறிமுறைக்கு பரிந்துரை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகள் சில முன்னேற்றம் கண்டிருப்பதனை ஒத்துக் கொள்வதாகவும், எனினும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பில் சுதந்திரமான மற்றும் நம்பகமான விசாரணைகள் உறுதிசெய்ய முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைச்சபையின் ஆணையாளர் அலுவலகம் பரிந்துரைத்த சிறப்பு பொறிமுறைகள் ஊடான தொழில்நுட்ப உதவிகளை வழங்க இலங்கை உரிய பதிலளிக்கவில்லையெனவும், வெளிவந்துள்ள புதிய ஆதாரங்கள் ஆயுத மோதல்களின் இறுதி கட்டங்களில் நடந்த நிகழ்வுகளை வெளிப்படத் தொடர்கிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தப் பின்னணியில், சுதந்திரமான சர்வதேச விசாரணைப் பொறிமுறைக்கு ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகம் பரிந்துரைப்பதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலுவான பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும்-சர்வதேச மன்னிப்புச் சபை-

இலங்கைமீது மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐநா மனித உரிமை ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள பலமான புதிய அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்த சர்வதேசம் சமூகம் செயற்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் யுத்தம் முடிந்து ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் நியாயம் வேண்டி நிற்பது வெட்கம்கெட்ட செயல் என சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்திய தலைமை நிர்வாகி ஆனந்தபத்மநாபன் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு வலியுறுத்தி நவிபிள்ளை வெளியிட்டுள்ள புதிய அறிக்கை முக்கியமானதும் அவசர மற்றும் கசப்பான நினைவூட்டல் ஆகுமெனவும் இனியும் தாமதிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். மனித உரிமை மீறல் தொடர்பில் சர்வதேசம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு செவிசாய்க்காது சர்வதேசத்தின் கண்ணில் மண்ணை தூவும் நடவடிக்கையில் இலங்கை ஈடுபட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நவநீதம்பிள்ளையின் அறிக்கைக்கு பதில்

ஜெனீவா ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்பட்டுள்ள மனிதவுரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான முன்கூட்டிய அறிக்கை குறித்த தமது கருத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தம் பற்றிய சர்வதேச விசாரணையை முழுமையாக நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இறுதி யுத்தம் குறித்து சர்வதேச விசாரணையொன்று பாரபட்சமின்றி இடம்பெறவேண்டும் என்று நவநீதம்பிள்ளை தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். எனினும், உள்நாட்டில் செயற்படுத்தப்படும் பொறிமுறையை அவர் கவனத்தில் கொள்ளவில்லை என்று இலங்கை அரசாங்கத்தின் பதில் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் நவிபிள்ளையின் அறிக்கை, பக்கசார்பானதாகவும், இறைமையுள்ள ஒரு நாட்டின் அரசாங்கத்தின் உள்விவகாரங்களில் தேவையின்றித் தலையீடு செய்வதாகவும் அமைந்துள்ளது என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, ஜெனிவாவில் உள்ள இலங்கை தூதரகம் நேற்றிரவு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகசின் சிறையில் உயிரிழந்த பிரித்தானிய பிரஜை தொடர்பில் விசாரணை-

கொழும்பு, மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் நேற்றுக்காலை உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாரடைப்பினால் அவர் உயிரிழந்திருக்கலாம் எனவும், அவரின் மரணவிசாரணை அறிக்கை இன்றுபிற்பகல் கிடைக்குமெனவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த கைதி நேற்றுக்காலை உயிரிழந்த நிலையில், சிறைச்சாலையின் மலசலகூடத்திலிருந்து மீட்கப்பட்டார். யாழ். மந்திகையை பிறப்பிடமாகக் கொண்ட பிரித்தானிய பிரஜையான இவர், 2007ஆம் ஆண்டு கொழும்பில் கைதுசெய்யப்பட்டதுடன், நீண்டகாலம் விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்தார். 2012இல் நீதிமன்ற விசாரணைகளைத் தொடர்ந்து, வரகக ஐந்துவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது என சிறைச்சாலைகள் திணைக்களம் கூறுகின்றது.

இந்திய மீனவர்கள் 29 பேரின் விளக்கமறியல் நீடிப்பு-

கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டிருந்த 29 தமிழக மீனவர்களின் விளக்கமறியல் உத்தரவு மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த மீனவர்கள் நேற்றுமாலை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை மார்ச் 10ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.கணேசமூர்த்தி கூறியுள்ளார். இதனையடுத்து, 29 தமிழக மீனவர்கள் யாழ். சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இம்மாதம் 13ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டமைக்காக இராமேஸ்வரம், மண்டபம் புதுக்கோட்டை, கோட்டைப்பட்டிணம் பகுதிகளைச் சேர்ந்த 29மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவர்களின் மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டிருந்தன.

மீசாலையில் பால் அபிவிருத்தி நிறுவனம் திறந்து வைப்பு.

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, மீசாலையில் இலங்கையும் ஜேர்மன் நாட்டின் அபிவிருத்தி நிறுவனமும் இணைந்து பால் அபிவிருத்தி நிறுவனம் ஒன்றை திறந்துவைத்துள்ளன. இந்நிகழ்வு இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் கலாநிதி ஜர்கன் மொஹாட் தலைமையில் நடைபெற்றது. இதில் யாழ். மாவட்ட உதவி அரசாங்க அதிபர் றூபினி வரதலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையம் திறக்கப்பட்டதனூடாக சாவகச்சேரி மற்றும் மீசாலை பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 400 குடும்பங்கள் நேரடியாக நன்மையடைந்துள்ளன.

பாரபட்சமின்றி ஒழுக்காற்று நடவடிக்கை-தேர்தல் ஆணையாளர்-

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் தேர்தல் செயலகத்திற்கு கிடைக்கும் முறைப்பாடுகளை துரிதமாக விசாரணை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் முறைப்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்பு குழுவின் நிரந்தர பிரதிநிகளுடன் தேர்தல் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின்போதே இவ்விடயத்தை அவர் கூறியுள்ளார். அரச வாகனங்களை தம்வசம் வைத்திருக்கும் அமைச்சர்கள் மற்றும் எதிர்கட்சிகளின் தலைவர்கள் அவற்றை மீளளிக்காத பட்சத்தில் அபராதத் தொகையை அறவிட நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொகமட் கூறியுள்ளார். இதேவேளை, அரச அதிகாரிகள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவார்களாயின் ஒழுக்காற்று அதிகாரிகளின் ஊடாக விசாரணைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

நேரடி விமான சேவை தொடர்பாக விளக்கம்-

பலாலி மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களிலிருந்து இந்தியாவிற்கான வானூர்தி சேவைகளை மீண்டும் நடத்த வேண்டும் என வடக்கு மாகாண சபை விடுத்த கோரிக்கை தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மாகாண சபையின் தவிசாளர் சீ.வி.கே. சிவஞானம் இதற்கான விளக்கத்தை கடிதம்மூலம், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வலவிற்கு அனுப்பி வைத்துள்ளார். வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது கோரிக்கை மட்டுமே என்றும் அவர் தமது கடிதத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். இத்தீர்மானம் குறித்து கடந்த அமைச்சரவை தீர்மான செய்தியாளர் சந்திப்பின்போது, கருத்து தெரிவித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வல, ஒரு நாட்டிற்கு வானூர்தி சேவையினை ஆரம்பிக்க 13ஆம் அரசியல் திருத்த சட்டத்தின்கீழ் மாகாண சபை ஒன்றிற்கு அதிகாரமழல்லை என குறிப்பிட்டிருந்தார். எனினும், அமைச்சரின் இந்த கருத்து உரிய விளக்கமின்றி வழங்கப்பட்டது. ஏற்கனவே 1960ஆம் ஆண்டுகளில் பலாலி திருச்சி வாநூர்தி சேவைகள் நடத்தப்பட்டதை மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமென்றே மாகாண சபை வலியுறுத்தியது என தவிசாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தத்தினால் பாதிக்கப்ட்டோருக்கு நட்டஈடு-

யாழ்ப்பாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 265பேருக்கு புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் நட்டஈட்டுக் கொடுப்பனவுக்கான காசோலைகள் இன்று வழங்கப்பட்டுள்ளன. நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்தும் வகையில் நட்டஈட்டுக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. யுத்தகாலத்தில் வன்முறையால் கடும் பாதிப்புக்குள்ளான 177 பேருக்கும் சொத்து அழிவு (வீடுகள்) ஏற்பட்ட 44 பேருக்கும் வீடுகளை இழந்த அரச உத்தியோகத்தர்கள் 44 பேருக்கும் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக புனர்வாழ்வு அதிகாரசபையால் 20 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. யாழ். மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதியமைச்சர் சரத் சந்திரசிறி முத்துகுமாரண, நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், புனர்வாழ்வு அதிகார சபையின் தலைவர் ஜி.ஏ.சமரசிங்க, புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஜி.எஸ்.விதானகே, உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.

சாய்ந்தமருது கடற்கரையில் மர்ம வெடிபொருள் கண்டுபிடிப்பு-

கல்முனை பொலிஸ் பிரிவின் சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் இன்றுபகல் மர்ம வெடிபொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மீனவர்களால் இப்பொருள் அவதானிக்கப்பட்டதைத் தொடர்ந்து கல்முனைப் பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொலிசாரும் விசேட அதிரடிப் படைடினரும் புலனாய்வுப் பிரிவினரும் அங்கு விரைந்து சென்று மர்மப்பொருள் குறித்து ஆராய்ந்துள்ளனர். எனினும் அது குறித்து ஆய்வு செய்வதற்காகவும் மேலதிக நடவடிக்கைக்காகவும் அம்பாறையில் உள்ள விசேட அதிரடிப்படை குண்டு செயலிழக்கும் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டது. இந்த மர்மப்பொருள் இந்தியாவில் பாவிக்கப்படும் கண்ணீர்ப் புகைக்குண்டாக இருக்கலாம் என்று அதிரடிப்படையினர் சந்தேகிக்கின்றனர்.

க.மு தம்பிராசாவின் போராட்டத்திற்கு காணாமற் போனோரைத் தேடியறியும் குழு, வலிவடக்கு மீள்குடியேற்ற சங்கம் ஆதரவு-

வலி வடக்கு மற்றும் சம்பூர் கிராம மக்களின் மீள்குடியேற்றத்திற்காக மக்களுக்குரிய உறுதிக் காணிகளிலிருந்து உடனடியாக அரச படைகள் வெளியேற வேண்டுமென்றும், உறுதி வழங்கப்பட்ட உலருணவு நிவாரணம் உடனடியாக வழங்கப்பட வேண்டுமென்றும் கோரி அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி க.மு தம்பிராசாவ அவர்களின் காலவரையற்ற தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கடந்த 21.02.2014ஆம் திகதியன்று காலை 6.45மணி தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டு இன்றைக்கு ஐந்தாவது நாளாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் காணாமற் போனோரை தேடியறியும் குழுவும், வலி வடக்கு மீள்குடியேற்ற சங்கமும் க.மு. தம்பிராசாவின் போராட்டத்திற்கு தமது ஆதரவினை வழங்கியுள்ளன.  Read more

நான்காவது நாளாக தொடரும் தம்பி க.மு தம்பிராசாவின் சத்தியாக்கிரகப் போராட்டம்-

thampi..வலி வடக்கு மற்றும் சம்பூர் கிராம மக்களின் மீள்குடியேற்றத்திற்காக மக்களுக்குரிய உறுதிக் காணிகளிலிருந்து உடனடியாக அரச படைகள் வெளியேற வேண்டுமென்றும், உறுதி வழங்கப்பட்ட உலருணவு நிவாரணம் உடனடியாக வழங்கப்பட வேண்டுமென்றும் கோரி அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி க.மு தம்பிராசாவ அவர்களின் காலவரையற்ற தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கடந்த 21.02.2014ஆம் திகதியன்று காலை 6.45மணி தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டு இன்றைக்கு நான்காவது நாளாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள துண்டுப் பிரசுரம் இங்கு இணைக்கப்படுகின்றது:-

வலி வடக்கு மற்றும் சம்பூர் மக்களின் தற்போதைய தேவை நிவாரணமும், மீள்குடியேற்றமும், வேலைவாய்ப்புமே. இவற்றைக்கூட நிறைவுசெய்ய முடியாத அரசு எமது மக்களுக்கு எந்த உரிமைகளை எப்படித் தரப்போகின்றது?  Read more

2014 ம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபையினர் தெரிவு; ‘புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்லாந்து’

 23.02.2014 இன்று சுவிஸ்லாந்து பேர்ன் மாநகரில் கூடிய ‘புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்லாந்து’ பொதுக்கூட்டத்தில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து பொதுச்சபையில் கலந்து கொண்டவர்களில் இருந்து 2014 மற்றும் 2015ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபையினர் தெரிவு செய்யப்பட்டனர். அத்துடன் ஆலோசனை சபையும் தெரிவு செய்யப்பட்டது. Read more

இலங்கையின் தீர்வு கூட்டு மீன்பிடித் தொழில்-அமைச்சர் ராஜித சேனாரத்ன-

rajitha senaratneஇந்திய மீனவர்களின் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக இலங்கை- இந்திய மீனவர்கள் இருநாட்டு கடற்பரப்புக்குள் தடையின்றி மீன்பிடிக்கக்கூடிய கூட்டுத் தொழில்முறை ஒன்று பற்றி ஆராய தயாராக இருப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது. இந்திய மீனவர்களை வேறு ஆழ்கடல் பிராந்தியத்திற்கு அனுப்புவதில் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள பெரும் பிரச்சனைக்கு இந்த கூட்டுத் தொழில்முறை தீர்வாக அமையும் என மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை மீனவர்களை பாதிக்காத விதத்தில் இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் வந்து தடையின்றி மீன்பிடித்துச் செல்வதற்கு இதன்மூலம் வழியேற்படும். அதேபோல், இலங்கை மீனவர்களும் இந்திய கடற்பரப்புக்குள் சென்று மீன்பிடித்துவர வாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் ராஜித்த குறிப்பிட்டுள்ளார். இந்திய மீனவர்கள் ஆயிரக்கணக்கில் படையெடுத்துவந்து இலங்கையின் கடல்வளங்களை சுரண்டிச் செல்வதாக மீனவ அமைப்புகளும் இலங்கை அரசும் நீண்டகாலமாக வாதிட்டு வருகின்றன. இந்நிலையில் இருதரப்பு கூட்டுத் தொழில்முறை இலங்கை மீனவர்களை மேலும் பாதிக்காதா என்று கேட்டதற்கு, அப்படி பாதிப்பு இருக்கின்ற காரணத்தினால் தான் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களை கைதுசெய்கிறோம். இப்படியான கூட்டுத் தொழில் முறை ஒன்று உருவாகுமானால் இப்படியான பாதிப்புகள் பற்றியும் இருதரப்பும் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் பதிலளித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணையாளர் – அரசியல் கட்சிகள் சந்திப்பு-

desapiryaதேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவின் தலைமையில் இன்றைய தினம் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான முறைபாடுகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் தேர்தல் முறைபாடுகள் தொடர்பில் ஆராயும் குழுவின் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டுள்ளனர். இந்த குழுவில் தெரிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், தேர்தல் கண்காணிப்பு குழுவின் பிரதிநிதிகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவின் போக்கு தன்னிச்சையானது-வீ. நாராணயசாமி-

narayanasamy ministerரஜிவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளை விடுதலை செய்ய தமிழக அரசு மேற்கொண்ட தீர்மானமானது தன்னிச்;சையானது என்று, இந்திய பிரதமர் அலுவலக அமைச்சர் வீ நாராயணசாமி குறிப்பிட்டுள்ளார். தமிழக முதல்வருக்கு இவ்வாறான தீர்மானம் மேற்கொள்ளும் அதிகாரம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக முதல்வரின் இந்த தீர்மானமானது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றும் எனவும் நாராயண சாமி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் புதைகுழி தோண்டும் பணி தொடர்கிறது-

mannarமன்னார் மனித புதைகுழி இன்று மீண்டும் தோண்டப்படுகின்றது. 31வது தடவையாகவும் இந்த புதைகுழி இன்று தோண்டப்படுகின்றது. இதுவரையில் இப் புதைகுழி 30 தடவைகள் தோண்டப்பட்டுள்ள நிலையில் 79 மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேவாலய விடுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு-

dead.bodyஅம்பாறையின், அக்கரைப்பற்று ஆரோக்கியமாதா தேவாலய விடுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சடலம் இன்றுகாலை 8 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. கண்ணகிபுரம் 2ம் பிரிவு பிரதேசத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 31 வயதுடைய மகேஸ்வரன் சேமியராஜ் என்பரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று வீட்டில் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து தேவாலய விடுதிக்குச் சென்ற நபர் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அக்கரைப்பற்று பொலிஸார் இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ராஜிவ் கொலையுடன் தொடர்புடையவர்களை விடுவிப்பதற்கு எதிரான மனு விசாரணை-

Indiaராஜிவ் காந்தி கொலை வழக்கின், 4 குற்றவாளிகளை விடுவிப்பதை எதிர்த்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது எதிர்வரும் 27ல் இந்த மனுமீதான விசாரணை இடம்பெறுமென உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில், குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அடுத்து முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ரொபட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்துள்ளதாக தமிழக முதல்வர் அறிவித்தார். தமிழக அரசின் இம்முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ராஜிவ் கொலை குற்றவாளிகள் விடுதலைக்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டது.

பேஸ்புக் தொடர்பில் 250 முறைப்பாடுகள்-

face bookசமூக இணையத்தளமான பேஸ்புக் தொடர்பில் இதுவரையில் 30 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது. அவமானப்படுத்தப்பட்டமை தொடர்பிலேயே அதிகளவு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணணிப் பிரிவு இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பேஸ்புக் தொடர்பில் 250 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணணி அவசர அழைப்புப் பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரோஷான் சந்தரகுப்த தெரிவிக்கின்றார். பேஸ்புக் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் காணப்படும் பட்சத்தில் 0112 691 692 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு தேராவில், உதவி வழங்கும் நிகழ்வில் புளொட் தலைவர் பங்கேற்பு-

theravil 22.02 (1)முல்லைத்தீவு தேராவில் பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஜோசெப் விநாயகமூர்த்தி அவர்களின் இரண்டு பிள்ளைகளுக்கு புதிய சைக்கிள்கள் நேற்று 22.02.2014 வழங்கி வைக்கப்பட்டன. சுவிஸ் அகரம் பவுண்டேசன் நிறுவனம் (சுவிஸ் எல்லாளன் இறைச்சிக்கடை) இந்த உதவியினை வழங்கியுள்ளது. அத்துடன் முன்னாள் போராளியான ஜோசெப் விநாயகமூர்த்தி, தனது மோட்டார் சைக்கிளை திருத்துவதற்கு உதவி கேட்டதற்கிணங்க அதற்கான நிதியுதவியையும் சில பொருட்களையும் அந்நிறுவனம் வழங்கியுள்ளது. மேலும் முன்னாள் போராளியும் இசைக் கலைஞருமான மாற்றுத் திறனாளி நகுலேந்திரன் நிமால், தனது இசைத்துறையினை மேம்படுத்துவதற்காக ஒரு தொகை நிதியுதவியையும் சுவிஸ் அகரம் பவுண்டேசன் நிறுவனத்தினர் (சுவிஸ் எல்லாளன் இறைச்சிக்கடை) வழங்கியுள்ளனர். இந்த உதவிகளுக்கான ஏற்பாட்டினை அதிரடி இணையத்தினர் மேற்கொண்டிருந்தனர். மேற்படி உதவியினை புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் வழங்கி வைத்ததுடன், திருமதி மீனா சித்தார்த்தன், புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரும், மத்திய குழு உறுப்பினருமான திரு.கந்தையா சிவநேசன் (பவன்), புளொட் முக்கியஸ்தரும், முன்னாள் வவுனியா உப நகரபிதாவும், கோயில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) வவுனியா கிளையையும், கோவில்குளம் இளைஞர் கழகத்தையும் சேர்ந்தவரான திரு எம்.கண்ணதாசன், மற்றும் கோயில்குளம் இளைஞர் கழகத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன், காண்டீபன், சதீஸ், சமூக சேவையாளரும், வவுனியா வரியிறுப்பாளர் சங்கத் தலைவருமான செல்வராஜா சந்திரகுமார் (கண்ணன்), வவுனியா வரியிறுப்பாளர் சங்க உறுப்பினரும், கவிஞருமான மாணிக்கம் ஜெகன், சமூக சேவையாளரும், அதிரடி இணைய இணைப்பாளருமான கேதீஸ் ஆகியோரும் மேற்படி நிகழ்வினில் பங்கேற்றிருந்தனர். இதேவேளை இந்த நிகழ்வின்போது புளொட் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கிராம மக்களின் குறைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

theravil 22.02 (17)theravil 22.02 (5)theravil 22.02 (8)theravil 22.02 (4)theravil 22.02 (3)theravil 22.02 (13)theravil 22.02 (12)theravil 22.02 (9)theravil 22.02 (15)

untitled

கூட்டமைப்புடன் பேசுவதில் சிக்கல் இல்லை-அமைச்சர் ராஜித-

அரசியல் தீர்வு தொடர்பில் இணக்கப்பாட்டை எட்டிக் கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வருமுன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அரசு இருதரப்பு பேச்சுக்களை நடத்தலாம். கூட்டமைப்பும் இந்நாட்டின் ஒரு அரசியல் கட்சி என்ற அடிப்படையில் அவர்களுடன் நேரடி பேச்சுக்களை நடத்துவதில் பெரும் சிக்கல்கள் இருப்பதாக தெரியவில்லை என மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேலும் தென்னாபிரிக்காவில் மேற்கொள்ளப்பட்டதைப் போன்ற உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை இலங்கையில் விரைவில் நிறுவி அதன் செயற்பாடுகளை முன்னெடுத்தால் சர்வதேச அழுத்தங்களிலிருந்து விடுபட முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் தேவி புகையிரதம் பளை வரை பயணம்-

யாழ் தேவி புகையிரதம் கிளிநொச்சியிலிருந்து பளை வரை இன்று பரீட்சார்த்தமாக பயணத்தை மேற்கொண்டுள்ளது. கிளிநொச்சி ரயில் நிலைய பொதுமுகாமையாளர் தலைமயில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் மார்ச் 4ஆம் திகதிமுதல் யாழ் தேவி பளைவரை உத்தியோகபூர்வமாக சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹமீட் கர்ஷாயின் இலங்கை விஜயம் இரத்து-

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்ஷாயின் இலங்கைக்கான விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா விஜயத்தை மேற்கொண்டு ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இன்று இலங்கை வருவதற்கு தீர்மானித்திருந்தார். தலிபான் அமைப்பின் குண்டுத் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் இராணுவத்தினர் 19பேர் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தால் அந்நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழ்நிலையைத் தொடர்ந்து ஹமீட் கர்சாயின் இலங்கைக்கான பணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் மூலம் தெரியவருகின்றது.

மன்னார் மனித புதைகுழியில் அகழ்வுப் பணி தொடர்கிறது-

மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் அடையாளம் காணப்பட்ட மனித புதைகுழியில் 30ஆவது நாளாக இன்று அகழ்வுப் பணிகள் இடம்பெறுகின்றன. மனித புதைகுழியிலிருந்து இதுவரை 76 மண்டை ஓடுகள் உள்ளிட்ட மனித எழும்புக் கூடுகள் மற்றும் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் திருக்கேதீஸ்வரம்-மாந்தை வீதியில் கடந்த வருடம் டிசம்பர் 20ஆம் திகதி நீர்குழாய் பொருத்தும் நடவடிக்கையின்போது இந்தமனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டன.

அமைச்சர் துமிந்த திஸாநாயக்க பயணித்த வாகனம் விபத்து-

கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க பயணித்த வாகனம் இன்றுகாலை கல்கமுவ பாதனிய பகுதியில் பௌசர் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. சம்பவத்தில் அமைச்சர் சிறுகாயங்களுக்குள்ளாகி குருனாகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். அமைச்சரின் சாரதியும் மேலும் ஒருவரும் இந்த சம்பவத்தின்போது காயமடைந்துள்ளனர்.

தேர்தல் ஆணையாளருடன் விசேட சந்திப்பு

தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவின் தலைமையில் தேர்தல் செயலகத்தில் நாளை முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான முறைபாடுகள் தொடர்பில் இச் சந்திப்பின்போது கலந்துரையாடப்படவுள்ளது. இதில் தேர்தல் முறைபாடுகள் தொடர்பில் ஆராயும் குழுவின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த குழுவில் தெரிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், தேர்தல் கண்காணிப்பு குழுவின் பிரதிநிதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மன்னார் மனித புதைகுழி, ஆத்ம சாந்தி பிரார்த்தனை-

மன்னார், திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழியிலிருந்து இதுவரை 79 மனித எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கான ஆத்ம சாந்தி பிரார்த்தனையும், ஏகாதசி 11 ரூத்ர ஹோம பிரார்த்தனையும் இன்றுகாலை திருக்கேதீஸ்வர ஆலய பாலாவியில் இடம்பெற்றது. ஆலய திருப்பனிச் சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த பிரார்த்தனை நிகழ்வில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு ஆத்மசாந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். புனிதம் அறியாதவர்களினால் ஏற்படுத்தப்பட்ட மனிதாபிமானமற்றதும், இறை பயமற்றதுமான இச்செயலை வன்மையாக கண்டிப்பதாக திருக்கேதீஸ்வர ஆலய திருப்பனிச்சபை தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் பல வீதிகளைப் புனரமைக்க நடவடிக்கை-

யாழ். நல்லுர் பிரதேச சபையின் 2014ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்ட வீதி அபிவிருத்தி தொடர்பாக கிராம உத்தியேகஸ்தர் பிரிவு ஜே-112,113 ஆகிய பிரிவுகளில் உள்ள பூதவராயர் வீதி, கலைமகள் வீதி, விநாயகர் வீதி, ஆறுமுகம் வீதி, வீரபத்திரர் வீதி, புதியசெங்குந்தா விதி போன்ற வீதிகள் நல்லுர் பிரதேச சபை உறுப்பினரான சண்முகலிங்கம் சுரேஸ்குமார் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி வாயிலாக வெகுவிரைவில் புனரமைப்பு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கை விரல் அடையாளத்தை கொண்டு குற்றவாளிகளை இனங்காண திட்டம்-

குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை இனங் காண்பதற்கான தானியங்கி கை விரல் அடையாள முறையை அறிமுகப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

ஸ்கந்தவரோதயன், தமிழறிஞர் கலாநிதி அகளங்கன் அவர்களின் மணிவிழா-

unnamed17ஸ்கந்தவரோதயன், தமிழறிஞர் கலாநிதி அகளங்கன் அவர்களின் மணிவிழா நேற்றையதினம் (21.02.2014) பிற்பகல் 2 மணியளவில் சுன்னாகம், கந்தரோடை ஸ்கந்தவரோதயக் கல்லூரி மண்டபத்தில் சிரேஸ்ட விரிவுரையாளர் கந்தையா ஸ்ரீ கணேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரதம விருந்தினராக மணிவிழாவில் கலந்துகொண்ட கலாநிதி அகளங்கன் (நா.தர்மராஜா), திருமதி பூரணேஸ்வரி அகளங்கன் ஆகியோர் விழா ஏற்பாட்டுக்குழுவினரால் வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம், இடம்பெற்ற பின்னர் வரவேற்புரையை ஆசிரியர் எஸ்.மோகன்ராஜ் அவர்கள் நிகழ்த்தினார். நிகழ்வின் ஆசியுரையை தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்கள் வழங்கினார். மணிவிழா அதிதிகளை நிகழ்வில் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் அதிபர் இ.ஈஸ்வரதாசன், இந்துசாசனம் ஆசிரியர், சிற்பி சி;.சிவசரவணபவன், பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா, யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் எஸ்.கிருஷ்ணராசா, அகில இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் மற்றும் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் பழைய மாணவி திருமதி யோகாதேவி ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரைகளை வழங்கினர். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் தலைவரும்,, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் அவரது பாரியார் மீனா சித்தார்த்தன் ஆகியோர் மணிவிழா அதிதிகளை பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன், சிறப்புரையையும் நிகழ்த்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

unnamed4unnamed-1221unnamed3unnamed5unnamedWDunnamed1unnamed 2unnamed17unnamed-2102unnamed-565unnamed2

கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ர வித்தியாலய மெய்வல்லுநர் போட்டி-

hhhhhயாழ். மல்லாகம், கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ர வித்தியாலய வருடாந்த மெய் வல்லுநர் போட்டி. கடந்த 19.02.2014 புதன்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் திரு. சோ.சுகிர்தன், தெல்லிப்பளை கேட்டக்கல்விப் பணிப்பாளர் திரு. சு.சண்முககுலகுமாரன் ஆகியோரும், கௌரவ விருந்தினராக ஓய்வுபெற்ற யாழ். இலங்கை வங்கியின் முகாமையாளர் திரு. எஸ். விக்னராஜா அவர்களும் கலந்துகொண்டிருந்தனர். வித்தியாலயத்தின் அதிபர் திரு. சிவகுமார் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிபர் திரு சிவகுமார் அவர்கள் உரையாற்றும்போது, இப்பாடசாலைக்கான மைதானத்தினை அமைப்பதற்கு உரிய காணியினை வாங்க வேண்டியிருக்கின்றது. இந்த காணிக்காக ஓய்வுபெற்ற யாழ் இலங்கை வங்கி முகாமையாளர் திரு. எஸ்.விக்னராஜா அவர்கள் 10 லட்சம் ரூபாவினை வழங்கி உதவியிருக்கின்றார். இருந்தபோதிலும் இப்பணியினை மேற்கொள்வதற்கு பெருமளவு நிதி மேலதிகமாக தேவைப்படுகின்றது. ஆகையினால் பழைய மாணவர்கள், புலம்பெயர்ந்து வாழும் இப்பிரதேச மக்களிடமும் இதற்கு தங்களாலான உதவிகளை வழங்க முன்வருமாறு விண்ணப்பிக்கின்றேன் என்று தெரிவித்தார். தொடர்ந்து உரை நிகழ்த்திய புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், இந்த மைதானம் அமைவதற்கு புலம்பெயர்ந்து வாழும் இப்பிரதேச மக்களும், பழைய மாணவர்களும் மாத்திரமல்லாது நன்கொடையாளர்களும் நிதியுதவியளிக்க வேண்டுமென்றும், இந்த மைதாத்தினை அமைப்பதற்கு உதவுவதன் மூலம் மாணவர்கள் கல்வியில் மாத்திரமல்லாது அவர்கள் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுக்களிலும் தம்மை ஈடுபடுத்தி உடல் ரீதியிலும் திறமை கொண்டவர்களாகவும், வலிமை பெற்றவர்களாகவும் விளங்க ஏதுவாகவிருக்கும் என்றும் தெரிவித்தார்.

நவிப்பிள்ளை அறிக்கையின் அடிப்படையில் தீர்மானம்;-அமெரிக்க அதிகாரி-

navneethamஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் அமையும் என அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கையில் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை உள்ளிட்ட பன்னிரண்டு முக்கிய பரிந்துரைகளை அவர் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையிலேயே அமெரிக்கா, தன்னால் இலங்கைக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்படும் பிரேரணையில் நவநீதம்பிள்ளையின் அறிக்கையை அடியொற்றியதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குக் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர், நவநீதம்பிள்ளையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில விடயங்களை அடிப்படையாக கொண்டே அமெரிக்கத் தீர்மானம் அமைந்திருக்கும். ஆனால், முழுமையாக அதை அடிப்படையாகக் கொண்டதாக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து மேலும் இரு மண்டையோடுகள் மீட்பு-

mannarமன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து இன்று மேலும் இரண்டு மண்டையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன்பிரகாரம் இந்த புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த மண்டையோடுகளின் எண்ணிக்கை 76 ஆக உயர்வடைந்துள்ளது. மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது முதல் 29 ஆவது நாளாக இன்று அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் சட்டமீறல் தொடர்பில் 30 பேர் கைது-

LK policeதேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 30 பேருக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை 9 வாகனங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. சட்டவிரோதமான முறையில் பேரணி சென்றமை, பதாதைகள் ஒட்டியமை மற்றும் பிரதான வீதிகளில் தேர்தல் இலக்கங்களை வரைந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்-

afkhan1ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்சாய் நாளை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பிலுள்ள ஆப்கானிஸ்தான் தூதுவராலயம் தெரிவித்துள்ளது. இலங்கை விஜயத்தின்போது ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கையின் உயர் அதிகாரிகள் பலருடன் கலந்துரையாடவுள்ளார். இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரையும் அவர் சந்தித்து பேசவுள்ளார். ஜெனீவாவில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் ஜனாதிபதி ஹமீட் கர்சாய் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது,

வவுனியாவில் வாராந்த பத்திரிகை நிறுவனம்மீது தாக்குதல்-

vavuniya blastவவுனியாவிலிருந்து வெளிவரும் வாராந்த பத்திரிகை நிறுவனமொன்றை இலக்கு வைத்து மணியளவில் வெடிபொருளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு 9.30 மணியளவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா, தேக்கவத்தை பகுதியில் அமைந்துள்ள இப்பத்திகை நிறுவத்தில் பணிகளை முடித்துக்கொண்டு அலுவலகத்தை மூடிய சில நிமிடங்களில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்தவர்களால் வீசப்பட்ட பொருளே வெடித்துள்ளதாகவும், எனினும் பத்திரிகை நிறுவனத்தின் முன்பாக இப் பொருள் வீழ்ந்து வெடித்தமையினால் நிறுவனத்திற்கு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லையென்றும் கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் தொடர்பில் 21 முறைப்பாடுகள் பதிவு-

imagesCAB3LJ2Hமாகாண சபைத் தேர்தலுடன் தொடர்புடைய 21 முறைபாடுகள் இதுவரை தமக்குக் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவற்றுள் தேர்தல் வன்முறைகள் தொடர்பிலான 7 முறைபாடுகளும், தேர்தல் சட்டமீறல்கள் குறித்து 14 முறைபாடுகளும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இந்த முறைபாடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், குறிப்பாக அச்சுறுத்தல்கள் மற்றும் தேர்தல் பிரசார அலுவகம்மீதான தாக்குதல்களுடன் தொடர்புடைய முறைப்பாடுளும் கிடைத்திருப்பதாகவும், தேர்தல் சட்டங்களை மீறுகின்றவர்களை கைது செய்வதற்காக பொலிஸ் குழுக்களை ஈடுபடுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாகாண சபைத் தேர்தல் சட்டத்தின் 74ஆம் விதிமுறையைப் பின்பற்றி நடக்குமாறு வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் வாக்காளர்களிடம் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை அகதிகளின் மத்தியில் சிறுநீரக கோளாறு-

untitled6தமிழகம் மதுரையில் உள்ள இலங்கை அகதிகளின் மத்தியில் சிறுநீரக கோளாறு சம்பந்தமான நோய்கள் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது திருவாரூர் அகதி முகாமில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இந்த முகாமில் கடந்த நான்கு வருடங்களில், சிறுநீரக கோளாறினால் நோயால் 9 அகதிகளின் மரணங்கள் பதிவாகி இருக்கின்றன. முகாமிற்கு விநியோகிக்கப்படுகின்ற தரமற்ற நீர் விநியோகமே இதற்கான காரணம்என்று த டைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது.

நலன்புரி நிலையத்திலிருந்து வெளியேறுமாறு இராணுவம் அழுத்தம்;

srilankan refugeesதாம் இடம்பெயர்ந்து தங்கியுள்ள யாழ். உடுப்பிட்டி நலன்புரி நிலையத்திலிருந்து தம்மை வெளியேறுமாறு இராணுவத்தினரும், அரச அதிகாரிகளும் தொடர்ச்சியாக வற்புறுத்தி வருவதாக அந்த முகாமில் உள்ள வலி. வடக்கு மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். வலி.வடக்கில் சொந்தக் காணியில்லாதவர்களையே மாவை கலட்டியில் உள்ள அரச காணியில் குடியேறுமாறு நலன்புரி நிலைய மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்தாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வலி.வடக்கு, பலாலியைச் சொந்த இடமாகக் கொண்ட மக்கள் கடந்த 24 வருடங்ளாக உடுப்பிட்டியிலுள்ள தனியார் காணியில் நலன்புரி நிலையம் அமைத்துத் தங்கியுள்ளனர். Read more