Header image alt text

கோபிதாஸின் இறுதிக் கிரியைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்ட பலர் பங்கேற்பு-

unnamed1unnamedபுதிய மகசின் சிறைச்சாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த கோபிதாஸின் அஞ்சலி நிகழ்வும், இறுதிக் கிரியைகளும் யாழ் வடமராட்சியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் இன்றுமுற்பகல் நடைபெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் மாகாணசபை, பிரதேச சபை அங்கத்தவர்கள், அரசியல்வாதிகள் என பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர். இதன்படி கோபிதாஸின் இறுதிச் சடங்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை அமைச்சர் ஐங்கரநேசன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், பா.கஜதீபன், சுகிர்தன் மற்றும் வலி வடக்கு பிரதேச சபை உப தவிசாளர் சஜீவன் ஆகியோரும் இன்னும் பல அரசியல்வதிகளும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.  Read more

மீள்குடியேறிய பெரியதம்பனை மக்கள் அவல வாழ்வு- 

மீள்குடியேறிய காலம்முதல் தமது அன்றாட கடமைகளை செய்யக்கூட இடமின்றி அவலவாழ்வு வாழ்வதாக வவுனியா பெரியதம்பனை மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவித்துள்ளனர். வவுனியா, பெரியதம்பனை கிராமத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் மக்களுக்குமிடையிலான சந்திப்பு இடம்பெற்றபோதே அம்மக்கள் இவ்வாறு கூறியுள்ளனர். வவுனியா, பெரியதம்பனை மகாவித்தியாலய மெய்வல்லுனர் போட்டி இடம்பெற்றநிலையில் நேற்றுமாலை கூட்டமைப்பினருக்கும் பெரியதம்பனை, கன்னாதிட்டி, நீலியாமோட்டை, பிரமானங்குளம், தம்பனைக்குளம் ஆகிய கிராம மக்களுக்குமிடையிலான சந்திப்பு மேற்படி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. மீள்குடியேறிய தமக்கு நிரந்தர வீட்டுத் திட்டங்களோ, மலசலகூட வசதிகளோ, போக்குவரத்து வசதிகளோ இல்லாது குடிநீர்ப் பிரச்சினையுடனும் காட்டு யானைகளால் பீதியின் மத்தியிலும் வாழ்கிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர். மக்களின் கோரிக்கைகளை செவிமடுத்த கூட்டமைப்பினர் தாம் இதுதொடர்பில் கூடுதல் கவனம் எடுப்பதுடன், உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர். இக் கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராஜா, இ.இந்திரராஜா, செட்டிகுளம் பிரதேசசபை உறுப்பினர் சுப்பையா ஜெகதீஸ்வரன் (சிவம்) ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 44 பேர் கைது-

மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் இதுவரையில் 42 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த முறைப்பாடுகள் தொடர்பில் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இதேவேளை, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 436 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இவற்றில் அதிகளவான முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலக முறைப்பாட்டு பணியகம் கூறுகின்றது. கொழும்பு மாவட்டத்தில் 120 முறைப்பாடுகளும், கம்பஹாவில் 48 முறைப்பாடுகளும், களுத்துறையில் 60 முறைப்பாடுகளும், காலியில் 45 முறைப்பாடுகளும், மாத்தறையில் 67 முறைப்பாடுகளும், ஹம்பாந்தோட்டையில் 52 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக முறைப்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

அரசாங்கம்மீது நீசா பிஸ்வால் குற்றச்சாட்டு-

நீதி, பொறுப்புடைமை அல்லது ஒருங்கிணைப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கம் போதுமான அளவில் செயற்பட்டிருக்கவில்லை என அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான உதவி ராஜாங்க செயலாளர் நீசா பீஸ்வால் தெரிவித்துள்ளார். இலங்கையின் யுத்தத்தின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பிலும் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார். இதேவேளை தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் நீசா பீஸ்வால் இம்மாதம் 4ம் திகதி இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது இந்தியாவின் அரச தலைவர்களை சந்தித்து, இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணை தொடாபில் பேசுவாரென்று தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாடுகளை நம்புவதால் பலன் இல்லை- அமைச்சர் டியூ குணசேகர-

எந்த ஒரு பிரச்சினைக்கும் வெளிநாடுகளையே நம்பி இருப்பதன்மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை என, சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார். உள்நாட்டில் ஏற்படுகின்ற எந்த ஒருபிரச்சினையானாலும் அது தொடர்பில் ஆலோசனை நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு, இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளை நாடுகிறது. ஆனால் அது அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தவறுகிறது. ஆனால் தொடர்ந்து அவ்வாறு செய்துகொண்டிருப்பதால், இறுதியில் எந்த தீர்வும் கிடைக்கப் போவதில்லை. இந்தியாவானாலும், பிரித்தானியாவானாலும், இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்தில் அந்நாடுகளால் கூட்டமைப்புக்கு வழங்கக்கூடிய ஒத்துழைப்புகளுக்கும் எல்லைகள் இருக்கின்றன என சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆளில்லா சான்றிதழ் வழங்குவது குறித்து ஆலோசனை-

காணாமல் போனவர்களுக்கான மரண சான்றிதழ்களை வழங்குவதற்கு பதிலாக, ஆளில்லா சான்றிதழ்களை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆலோசனை அடிப்படையில் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இலங்கையில் காணாமல் போன 16000 பேர் குறித்த தரவுகள் செஞ்சிலுவை சங்கத்திடம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களுக்கான மரண சான்றிதழ்களை வழங்க அரசாங்கம் முயற்சித்த போதும், அதற்க எதிர்ப்புகள் வெளியாக்கப்பட்டிருந்தன. இந்நிலையிலேயே ஆளலில்h சான்றிதழ்களை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் ஆலோசனை நடத்துகிறது. சர்வதேச ரீதியாக பல நாடுகளில் இந்த நடைமுறை காணப்படுவதாகவும், இது மரண சான்றிதழுக்கு நிகரானது எனப்படுகின்றபோது, அதனை குற்றவியல் தொடர்பான நடவடிக்கைகளில் பயன்படுத்த முடியாது என்றும் கூறப்படுகிறது.

ஜனாதிபதி மியன்மாருக்கு விஜயம்-

வங்காளவிரிகுடா பிராந்திய நாடுகளின் பொருளாதார அபிவிருத்தி அமைப்பான பிம்ஸ்ட்டெக் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாளை மியன்மார் செல்லவுள்ளார். இம் மாநாட்டில், பங்களாதேஸ், இந்தியா, மியன்மார், தாய்லாந்து, பூட்டான், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் அரச தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த மாநாட்டுக்கு சமாந்தரமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும், இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிற்குமிடையிலான சந்திப்பும் இடம்பெறவுள்ளது. ஜெனீவா மாநாட்டின்போதான அமெரிக்கப் பிரேரணை தொடர்பில் இதன்போது பேசப்படும் என கூறப்படுகிறது. இதற்கிடையில் இம் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வெளிவிகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் ஏற்கனவே நேற்று மியன்மார் சென்றுள்ளார். அங்கிருந்து அவர் ஜெனீவா மாநாட்டிற்கு செல்லவுள்ளார்.

தற்காலிக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்குமாறு கோரல்-

மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்களின் நிமித்தம், தங்களின் கட்சி காரியாலயங்களுக்கு முன்னால் வேட்பாளர்களின் பெயர் மற்றும் தெரிவு இலக்கத்தை காண்பிக்கும் டிஜிட்டல் விளம்பரப் பலகைகளை வைக்க ஐக்கிய தேசிய கட்சி அனுமதி கோரவுள்ளது. கட்சியின் பொதுசெயலர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் விரைவில் தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரவிருப்பதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்களின் பொருட்டு தற்காலிக அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் இம்மாதம் 21ம் திகதியுடன் நிறைவடைகிறது. தேசிய அடையாள அட்டை அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்ட அடையாள அட்டை இல்லாதவர்கள் உடன் விண்ணப்பிக்குமாறு, பெப்ரல் கோரிக்கை விடுத்துள்ளது.

இணக்கப்பாட்டை மீறி இந்திய மீனவர்கள் தொழில் புரிவதாக குற்றச்சாட்டு-

தமிழகம் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த இயந்திர படகு மீனவர்கள் நேற்று முதல் தங்களின் மீன்பிடி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் சென்னையில் இடம்பெற்ற இலங்கை மற்றும் தமிழக மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் போது, ஒருமாத காலத்துக்கு இயந்திரபடகுகளின் மீன்பிடியை தவிர்ப்பதாக தமிழக மீனவர்களால் இணங்கப்பட்டிருந்தது. இதன்படி கடந்த பெப்ரவரி 13ம் திகதிமுதல் அவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளை தவிர்த்து வந்தனர். எனினும் உடன்படிக்கையின்படி மேலும் 2 வாரங்கள் இருக்கின்றபோதிலும், அவர்கள் குறித்த உடன்படிக்கையை மீறி நேற்றுமுதல் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்புக்கும் இடையிலான நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ளும் வகையிலேயே இந்த இணக்கப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும் தமது தொழில் பாதிக்கப்படுவதாக தெரிவித்து, தமிழக மீனவர்கள் மீண்டும் தொழிலை ஆரம்பித்துள்ளனர்.

ஆளும்கட்சி அமைச்சர்கள் தேர்தல் சட்டமீறல்-பவ்ரல்-

ஆளும்கட்சி அமைச்சர்களே பாரியளவில் தேர்தல் சட்டங்களை மீறி வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் குற்றஞ்சாட்டியுள்ளது. குறிப்பாக தென் மாகாணசபையில் அதிகளவில் தேர்தல் சட்ட மீறல்கள் பதிவாகியுள்ளதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே ஒன்றுக்கு மேற்பட்ட கட்சி அலுலகங்கள் அமைக்கப்பட்டு பிரசாரம் செய்யப்படுகின்றது. தென் மாகாணத்தில், அரசாங்க அதிகாரிகள் நேற்று விவசாய உபகரணங்களை மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது. சில அமைச்சர்கள் பிரதேச மற்றும் கிராம மட்டத்தில் இணைப்பு அலுவலகங்களை அமைத்துள்ளனர். தேர்தல் தொகுதியொன்றில் ஒரு கட்சி ஒரு கட்சிக் காரியாலயத்தை மட்டுமே நடத்திச் செல்ல முடியும் எனவும், ஒரே தேர்தல் தொகுதியில் பல கட்சிக் காரியாலமகளை அமைப்பது சட்டவிரோதமானது என அவர் கூறியுள்ளார்.

ஏழாலையில் 35 பிள்ளைகளுக்கு இலவச ரியூசன் வகுப்பு நடத்த ஏற்பாடு-

யாழ். ஏழாலை பகுதியில் இருக்கின்ற ஏழு பாடசாலைகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள 35 பிள்ளைகளுக்கு இலவசமாக டியூசன் வகுப்பு நடத்துவதற்கான ஆரம்ப நிகழ்வு கடந்த 26.02.2014 புதன்கிழமை யாழ். ஏழாலை சைவ சன்மார்க்க பாலர் முன்பள்ளியில் நடைபெற்றது. லண்டனிலே இருக்கின்ற எங்கள் தோழர் மணிவண்ணன் அவர்களும், அவருடைய தோழர்களும் நிதியுதவி வழங்கியமைக்கு அமைவாக இந்த பிள்ளைகளுக்கான டியூசன் வகுப்பு நடத்துவதற்கான ஆரம்ப நிகழ்வு ஏழாலை சைவ சன்மார்க்க பாலர் முன்பள்ளியின் பொறுப்பாளர் திருமதி மல்லிகா ரவீந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. மேற்படி பாலர் முன்பள்ளியின் ஆசிரியர்களான க.அருந்தவநேசன், நவகேதீஸ்வரன் ஆகியோரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் இதனை ஆரம்பித்து வைத்துள்ளனர். இந்நிகழ்வில் ஊர்ப் பிரமுகர்களும், பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர்.

ஜெனீவாவுக்கு குழுவை அனுப்ப தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்-

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கை சர்வதேச விசாரணை ஒன்றை வலியுறுத்தியது என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளதுடன் எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜெனிவாவிற்கு குழுவொன்றை அனுப்புவதற்கு திட்டமிட்டு வருகின்றது எனவும் கட்சியின் முக்கியஸ்தர்கள் நேற்று தெரிவித்துள்ளனர். யாழில் கடந்த 27ஆம் திகதி நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாண சபை அங்கத்தவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுசேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனைக்கு முடிவுகட்ட நாம் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க முடியாது. இதற்கு தீர்வு காண வேண்டும். அரசியல் தீர்வுக்கான எமது கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற தவறிவிட்டது. இதனால் நாம் சர்வதேச இணக்க செயற்பாட்டையே விரும்புகின்றோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைமீது நீசா பீஸ்வால் மீண்டும் குற்றச்சாட்டு-

நீதி, பொறுப்புடைமை அல்லது ஒருங்கிணைப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கம் போதுமான அளவில் செயற்பட்டிருக்கவில்லை என்ற அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்காயன உதவி ராஜாங்க செயலாளர் நீசா பீஸ்வால் தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டர் தளத்தில் அவர் இந்த பதிவை செய்திருக்கிறார். இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பிலும் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் நீசா பீஸ்வால் இந்த மாதம் 4ம் திகதி இநதியாவுக்கான விஜயததை மேற்கொள்கிறார். இதன்போது இந்தியாவின் அரச தலைவர்களை சந்தித்து, இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணை தொடாபில் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவு, எலும்புக்கூடுகளை இராசாயன பகுப்பாய்விற்கு உட்படுத்த உத்தரவு-

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிலுள்ள காணியொன்றிலிருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை இரசாயன பகுப்பாய்விற்கு உட்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் பதில் நீதவான் தங்கராசா பரஞ்சோதி, மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பில் விசாரணை நடத்தியதுடன், இரசாயன பகுப்பாய்விற்கும் உத்தரவிட்டுள்ளார். புதுக்குடியிருப்பு மூங்கிலாறு வடக்கு பகுதியிலுள்ள தனியார் காணியொன்றை உழவு இயந்திரம் பயன்படுத்தி துப்புரவு செய்தபோது 09 எலும்புக்கூடுகள் 27ஆம் திகதி இரவு கண்டெடுக்கப்பட்டன. இந்த எலும்புக்கூடுகள் பாயில் சுற்றப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு, மனித எச்சங்கள் விடயத்தில் தொடர்பில்லை-இராணுவம்-

முல்லைத்தீவு, உடையார்கட்டு பகுதியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களுக்கும், தங்களுக்கும் தொடர்பில்லை என்று இராணுவம் தெரிவித்துள்ளது. இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய விடுத்துள்ள விசேட அறிக்கை ஒன்றில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடையார்கட்டு பகுதியில் விவசாயத்துக்காக ஒரு பகுதி நிலம் தோண்டப்பட்டபோது, மனித எலும்பு கூடு ஒன்று அவதாகிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர், அங்கு மேலும் 8 மனித எச்சங்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில் இலங்கையின் பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட தாக்குதலில் கொல்லபட்டவர்களின் எலும்புக்கூடுகளே இவ்வாறு மீட்கப்பட்டிருப்பதாக சிலத்தரப்பினர் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும், ஆனால் அவை உண்மைக்கு புறம்பான செய்தி என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை குறித்த பிரேரணைமீதான வாக்கெடுப்பில் ஜப்பான் பங்கேற்காது-

ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் கொண்டுவரப்படும் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் ஜப்பான் பங்கேற்காது என அறிவித்துள்ளது. அத்துடன் இலங்கை விடயத்தில் அமெரிக்காவின் யோசனை பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என தாம் நினைக்கவில்லை என ஜப்பானிய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இரு தரப்பையும் திருப்திப்படுத்தும் வகையில் ஜப்பான் வாக்கெடுப்பில் பங்கேற்காது என ஜப்பானிய தூதரகம் அறிவித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கடற்படையினர்மீது முதன் முறையாக வழக்கு பதிவு-

தமிழக மீனவர்களை தாக்கியதாக இலங்கை கடற்படையினர்மீது ராமேஸ்வரம் பொலிஸ் நிலையத்தில் முதன் முறையாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4பேர் கடந்த முதலாம் திகதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்கள்மீது தாக்குதல் நடத்தியதோடு, மீன்களையும், வலைகளையும் பறித்துச் சென்றனர். இது குறித்து பாதிக்கப்பட்ட படகு உரிமையாளர் மீனவர் சகாயராஜ் கடந்த மாதம் 2ம் திகதி ராமேஸ்வரம் பொலிஸ் நிலையத்தில் இலங்கை கடற்படையினர்மீது முறைப்பாடு கொடுத்துள்ளார். இந்நிலையில், 27 நாட்களுக்கு பிறகு ராமேஸ்வரம் கோவில் பொலீசார் நேற்றிரவு இலங்கை கடற்படையினர்மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதேபோல் இலங்கை மீனவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்தமாதம் 3ஆம் திகதி மீன்பிடிக்க சென்ற பாம்பன் மீனவர் ஜாண் பிரிட்டோ என்பவரின் வலைகளை இலங்கை மீனவர்கள் 20க்கும் மேற்பட்டோர் பறித்துள்ளனர். இது குறித்து, பாம்பன் பொலிஸ் நிலையத்தில் கடந்த 5ஆம் தேதி இலங்கை மீனவர்கள்மீது பிரிட்டோ முறைப்பாடு செய்துள்ளார். இதன்படி இலங்கை மீனவர்கள்மீது 23 நாட்களுக்கு பிறகு பாம்பன் காவல்துறையினர் நேற்றிரவு வழக்குப் பதிவு செய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழில் பிரித்தானிய பிரஜைகளின் நலன்சார் கலந்துரையாடல்-

யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள பிரித்தானிய பிரஜைகளின் நலன்புரிசார் பிரச்சினைகளுக்கு உதவிகளை வழங்கும் முகமாக பிரித்தானிய தூதரகத்தின் ஆலோசனைப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட சந்திப்பு ஒன்று நடைபெற்று வருகின்றது. குறித்த சந்திப்பானது பிரித்தானிய தூதரகத்தின் ஆலோசனை பிரிவுத் தூதுவர் ஜோன்நீல் தலைமையில் இன்றுகாலை 10 மணி முதல் ஏ9 வீதியில் உள்ள ‘எக்ஸ்போ பவிலியன்’ விருந்தினர் விடுதியில் நடைபெற்று வருகின்றது. அதன்படி பிரித்தானிய பிரஜைகள் மற்றும் அந்தநாட்டில் பிரஜாவுரிமை பெற்ற இலங்கையர்கள் என தற்காலிகமாக நாட்டில் தங்கியிருப்போருக்கு ஏற்படும் நலன்புரிசார் பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய உதவிகள் மற்றும் வழங்க முடியாத உதவிகள் தொடர்பிலான ஆலோசனை வழங்கும் கலந்துரையாடலாகவே இது அமைவதாக தெரிவிக்கப்படுகின்றது.

55ஆயிரம் அரச ஊழியர்கள் தேர்தல் கடமைகளில்-

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் கடமைகளுக்காக 55 ஆயிரம் அரசாங்க ஊழியர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. வாக்குச் சாவடிகளின் நடவடிக்கைகள் மற்றும் வாக்குகளை எண்ணும் செயற்பாடுகள் தொடர்பில் அந்த உத்தியோகத்தர்களுக்கு தற்போது பயிற்சிகள் வழங்கப்படுவதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார். இதேவேளை, மாகாண சபைத் தேர்தலின் பொருட்டு வாக்காளர் அட்டை விநியோகம் எதிர்வரும் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வாகனம் மீதான தாக்குதலில் ஒருவர் காயம்-

யாழ். ஏழாலை வடக்கில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வாகனத்தின்மீது இனந்தெரியாத நபர்கள் நேற்றுஇரவு தாக்குதல் மேற்கொண்டதுடன் இதனால் வாகனத்தில் பயணித்த ஒருவர் காயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்களை அவர்களின் இருப்பிடங்களுக்கு கொண்டுசென்று விடும் வாகனம்மீதே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 8பேர் கொண்ட குழுவொன்று கற்கள் மற்றும் பொல்லுகளால் தாக்குதல் நடத்தி வாகனத்தினை சேதமாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீடு தீக்கிரையால் 3 இலட்சம் ரூபா பொருட்கள் நாசம்-

யாழ். புத்தூர் பெரியபொக்கணைப் பகுதியிலுள்ள நாளாந்த கூலி தொழிலாளியான இரத்தினசிங்கம் துஷ்யந்தன் என்பவரது வீடு நேற்று இரவு முற்றாக எரிந்து சேதமாகியுள்ளதுடன் வீட்டிலிருந்த 3 இலட்சத்துக்கும் அதிமான பொருட்களும் தீயில் கருகியுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். அத்துடன் குறித்த தொழிலாளிக்கு தற்காலிக குடிசையினை யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் இன்று அமைத்துக்கொடுத்துள்ளனர். மேற்படி தொழிலாளியின் வீட்டில் இருந்த தொலைக்காட்சிப்பெட்டி திடீரென வெடித்துள்ளதுடன் மின்சார இணைப்புக்களுக்கு தீ பரவ தொடங்கியுள்ளது. உடனடியாக வீட்டிலிருந்தவர்கள் வெளியில் சென்றுவிட்டனர். தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினரும் பொலிஸாரும் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டபோதும், அது கைகூடாத நிலையில் வீடு முற்றாக எரிந்துள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபை கணக்காளர் வீட்டின்மீது கல்வீச்சு-

மட்டக்களப்பு மாநகரசபையின் கணக்காளரின் வீட்டின்மீது இன்று அதிகாலை 2மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் கல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. திருமதி சிவராஜாவின் பூம்புகாரில் உள்ள இல்லத்தின்மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் இல்லத்தின் யன்னல் கதவுகளுக்கு சேதமேற்பட்டுள்ளன. தாக்குதல் நடத்தியோரை அடையாளம் காணமுடியாவிடினும், வீட்டின் அருகில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராவில் தாக்குதல் நடத்தப்பட்டோர் பதியப்பட்டுள்ளதாகவும் அவற்றினை பொலிஸாரிடம் வழங்கியுள்ளதாகவும் திருமதி சிவராஜா குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் சிவில் பாதுகாப்பு குழுவினருடன் பொலீஸ் மாஅதிபர் சந்திப்பு-

வவுனியா மாவட்டத்தில் இயங்கிவரும் சிவில் பாதுகாப்பு குழு பிரதிநிதிகளுடன் வட மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர இன்று கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். வவுனியா மாவட்டத்தின் 70 சிவில் பாதுகாப்பு குழுக்களின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டிருந்தனர். குற்றச்செயல்களை கட்டுப்படுத்தல், ஊழலை இல்லாதொழிப்பது தொடர்பாக முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த இக் கலந்துரையாடலில் சிவில் பாதுகாப்பு குழுக்களிடமிருந்து சமூக பிரச்சினைகள் தொடர்பில் எழுத்துமூலமாக கருத்துக்கள் கோரப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் வவுனியா அரசாங்க அதிபர் பந்துல கரிச்சந்திர, வவுனியா பிரதேச செயலாளர் கா. உதயராசா, கிராமசேவகர்கள், சிவில் பாதுகாப்பு குழு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள்முதல் தபால்மூல வாக்காளர் அட்டைகள் விநியோகம்-

தபால் மூல வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இடம்பெறும் என தபால் மாஅதிபர் ரோஹண அபேரத்ன தெரிவித்துள்ளார். தபால் மூல வாக்காளர் அட்டைகள் தேர்தல்கள் திணைக்களத்தினால் தபால் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஏனைய வாக்களார் அட்டைகளை பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

க.மு தம்பிராசாவின் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்பதாவது நாளாகவும் தொடர்கிறது-

வலி வடக்கு மற்றும் சம்பூர் கிராம மக்களின் மீள்குடியேற்றத்திற்காக மக்களுக்குரிய உறுதிக் காணிகளிலிருந்து உடனடியாக அரச படைகள் வெளியேற வேண்டுமென்றும், உறுதி வழங்கப்பட்ட உலருணவு நிவாரணம் உடனடியாக வழங்கப்பட வேண்டுமென்றும் கோரி அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி க.மு தம்பிராசாவ அவர்கள் மேற்கொண்டுவரும் காலவரையற்ற தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்றுடன் ஒன்பதாவது நாளாகவும் தொடர்கின்றது. இது தொடர்பில் க.மு தம்பிராசா அவர்கள் தெரிவிக்கையில்,
எமது போராட்டம் நேற்று எட்டாவது நாளாக தொடர்ந்திருந்தது. இதன்போது எமக்கு ஆதரவளிக்கும் முகமாகவும் எம்மை உற்சாகப்படுத்தும் வகையிலும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் நேற்றையதினம் இங்கு வருகை தந்து எமக்கு ஆதரவு நல்கியிருந்தார். Read more

காணாமல் போனவர்கள் குறித்து ஐ.சி.ஆர்.சி ஆய்வு-

red cross 1இலங்கையில் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் தேவைகள் குறித்த மதிப்பீடு ஒன்றை தாம் ஆரம்பித்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடனேயே இதை தாம் செய்வதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இந்த மதிப்பீடானது காணாமல் போனவர்கள் குறித்த முடிவு தெரியாமல் இன்னமும் தொடரும் சம்பவங்கள் குறித்து மறுஆய்வு செய்து, உறுதி செய்யவும், அதேபோன்று இந்த விவகாரம் குறித்து தீர்வு காணப்பட்ட விடயங்களை முடிவுக்கு கொண்டுவரவும் உதவும் என்று செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது. 16,000 இற்கும் அதிகமான காணாமல் போன சம்பவங்கள் குறித்த பதிவுகள் தம்வசம் இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் 2009இல் போர் முடிவுக்கு வந்த பின்னர், காணாமல் போனவர்கள் குறித்து ஒரு சர்வதேச அமைப்பு மேற்கொள்ளும் முதலாவது கணிப்பீடு இதுவாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இருமொழிகளில் தேசிய அடையாள அட்டை விநியோகம்-

NIC New (1)சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூலம் அச்சிடப்பட்ட தேசிய அடையாள அட்டைகள் இன்றிலிருந்து விநியோகிக்கப்படுவதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ். சரத் குமார தெரிவித்துள்ளார். இதன்கீழ் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்கும் நடைமுறையிலோ அல்லது கட்டணங்களிலோ மாற்றம் ஏற்பட மாட்டாது என்றும் ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார். மொழி ரீதியான பிரச்சினைகளை தவிர்ப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி சிங்கள மொழியில் உள்ள தகவல்களை தமிழ் மொழியிலும் மொழிப்பெயர்த்து உள்ளடக்கிய முதல் அடையாள அட்டை இன்று வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பு, ஜாவத்தையில் அமைந்துள்ள ஆட்பதிவு திணைக்களத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. முதல் அடையாள அட்டையை ஆட்பதிவு திணைக்களத்தில் 15 வருடங்களாக பணியாற்றும் ஊழியர் ஒருவர் பெற்றுக் கொண்டுள்ளார்.

இரா. சம்பந்தனுக்கு டெலோ கடிதம் அனுப்பிவைப்பு-

teloதமிழ் மக்கள் எதிர்நோக்கி நிற்கும் மிக முக்கியமான பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு விவாதித்து, தீர்க்கமான முடிவுகளை எடுத்து செயற்பட வேண்டிய தேவையை உணர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதி உயர் பீடமான ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை மிக விரைவாக கூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா. சம்பந்தனைக் கேட்டுள்ளது. தமிழீழ விடுதலை இயக்கத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கல நாதன், தமிழீழ விடுதலை இயக்கச் செயலாளர் கென்றி மகேந்திரன் ஆகியோர் ஒப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகள் அதிகரிப்பு-

தேர்தல் சட்ட மீறல் மற்றும் தேர்தல் வன்முறைகள் குறித்து இதுவரை 408 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதென கபே அமைப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் சட்ட விதிகள் மீறப்பட்டமை குறித்து 392 முறைப்பாடுகளும் தேர்தல் வன்முறைகள் குறித்து 96 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதென கபே இயக்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் 240 முறைப்பாடுகளும் தென் மாகாணத்தில் 156 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதென கபே இயக்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையர்களுடன் கைவிடப்பட்ட படகு கரையொதுங்கியது-

unnamed265 இலங்கையர்களுடன் நடுக்கடலில் கைவிடப்பட்ட படகு ஒன்று கடலில் மிதந்தவாறு அந்தமான் தீவுகளுக்கு அருகில் கரையொதுங்கியுள்ளதாக தெரியவருகிறது. வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக படகுமூலம் ஆட்களை அழைத்துச் செல்லும் நபர்களினால் இவர்கள் நடுக்கடலில் கைவிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆட்கடத்தல் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள நபர்கள் இந்த இலங்கைப் பிரஜைகளிடமிருந்து ஒரு லட்சம் ரூபா முதல் மூன்று லட்சம் ரூபா வரையில் அறவிட்டுள்ளதுடன், மட்டக்களப்பு பிரதேசத்திலிருந்து சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் இவர்கள் படகில் ஏறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு எதிராக விசாரணை-

நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் கடமையாற்றிவரும் 250 சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படவுள்ளது. இந்த உத்தியோகத்தர்கள் ஒழுக்க விதிகளை மீறிச் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டதன்படி இவர்களுக்கெதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படவுள்ளது. இவ் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் செல்லிடத் தொலைபேசி மற்றும் போதைப்பொருள் போன்றவற்றை சட்டவிரோதமான முறையில் சிறைக்குள் எடுத்துச் சென்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் வைத்தியரின் வாகனம்மீது துப்பாக்கிச்சூடு-

ஜனாதிபதியின் வைத்தியர் எலியந்த வைட்டின் வாகனத்தின்மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடர்பிலான விசாரணைகளுக்காக, பொலீஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் இரண்டு பொலீஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. வைத்தியரின் வீடு அமைந்துள்ள மிரிஹானை எதிரிசிங்க வீதியில் வைத்து இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தப்படும்போது, வைத்தியர் வாகனத்தில் இருக்கவில்லை என்றும், அவரது சாரதி மாத்திரமே இருந்ததாகவும் பொலீசார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்தவர்களே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமானப்படையின் புதிய தளபதி பதவிப் பிரமாணம்-

vimanapadai thalapathiவிமானப்படையின் புதிய தளபதியாக எயார் மாஷல் கோலித அரவிந்த குணதிலக இன்று பதவி ஏற்றுள்ளார். விமானப் படையின் 14ஆவது தளபதியாக இவர் நியமனம் பெற்றுள்ளார். பண்டாரவளை புனித தோமஸ் மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்விகற்ற கோலித குணதிலக, கெடட் அதிகாரியாக 1980ஆம் ஆண்டு விமானப் படையில் இணைந்தார். 1982ஆம் ஆண்டில் அவர் விமானியாக பதவியுயர்வு பெற்றார். இவர் ‘ரணவிக்ரம’ மற்றும் ‘ரணசூர’ பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டவர். சரக்கு விமானங்கள் மற்றும் தாக்குதல் விமானங்களின் விமானியான இவர், சுமார் 4ஆயிரம் மணிநேரம் வானில் சஞ்சரித்துள்ளார்.

முல்லைத்தீவிலும் எலும்புக்கூடுகள் மீட்பு-

mannarமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிலுள்ள காணியொன்றிலிருந்து எலும்புக்கூடுகள் சில மீட்கப்பட்டுள்ளன. புதுக்குடியிருப்பு மூங்கிலாறு வடக்கு பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான காணியொன்றில் இருந்து இந்த எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான தகவல் கிடைத்ததை அடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதற்கு முன்னரும் மன்னார், திருகோணமலை ஆகிய பகுதிகளில் மனித எலும்புக்கூடுகளும் எச்சங்களும் மீட்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் 56 பக்க அறிக்கை-

2013ம் ஆண்டு வரையில் தீர்க்கப்படாத இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான 56 பக்க அறிக்கை ஒன்றை அமெரிக்க ராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதில் இலங்கை தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இலங்கையில் இடம்பெறுகின்ற தேர்தல்கள் எவையும் முறையாக இடம்பெறுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச சொத்துக்களை தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பயன்படுத்துகின்றமை உள்ளிட்ட விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. பாதுகாப்பு தரப்பினர் பல மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றனர். சிவில் பிரதிநிதிகள் கைது செய்யப்படுகின்றமை, Read more

அகில இலங்கை சிவாலய தரிசன சைக்கிள் யாத்திரை-

unnamedunnamed (1)அகில இலங்கை சிவாலய தரிசன சைக்கிள் யாத்திரை சிவராத்திரி தினமான இன்று (27.02.2014) சித்தன்கேணி ஸ்ரீ சிவசிதம்பரேஸ்வரர் தேவஸ்தானத்திலிருந்து வாழ்நாள் சாதனை வீரர்களான சு.குணசேனரா, வை.கைலைநாதன் ஆகிய இருவரும் தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர். விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று தேவஸ்தான குரு சிவஸ்ரீ.சபா வாசுதேவக்குருக்கள் அவர்களால் யாத்திரை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் வைபவத்தில் வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் பெருமளவான அடியார்களும் கலந்துகொண்டிருந்தனர். இந்த சைக்கிள் யாத்திரையானது இலங்கை மக்களின் சுபீட்சமான வாழ்வுக்காக இடம்பெறுவது இங்கு குறிப்பிடத்தக்கது. 

தேர்தல் குறித்து 408 முறைப்பாடுகள் பதிவு-

தேர்தல் சட்டமீறல் மற்றும் தேர்தல் வன்முறைகள் குறித்து இதுவரை 408 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதென கபே இயக்கம் தெரிவித்துள்ளது. தேர்தல் சட்டவிதிகள் மீறப்பட்டமை தொடர்பில் 392 முறைப்பாடுகளும், தேர்தல் வன்முறைகள் குறித்து 96 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதென கபே இயக்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் 240 முறைப்பாடுகளும், தென் மாகாணத்தில் 156 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதென கபே இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

நளினி உட்பட நால்வரின் விடுதலைக்கு உச்சநீதிமன்றம் தடை-

Indiaராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 4 பேரின் விடுதலை தொடர்பில் இன்று உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் முருகன் சாந்தன் பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை கடந்த 18ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து உச்ச நீதிமன்ற பரிந்துரையின்படி முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து மத்திய அரசு மீளாய்வு மனுவை தாக்கல் செய்தது. இம்மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோதே உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அத்துடன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நளினி, ரவிச்சந்திரன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரையும் விடுவிக்கக் கூடாது என மத்திய அரசு புதிய மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம் இவர்கள் 4 பேரின் விடுதலைக்கு எதிராக இடைக்கால தடைவிதித்து தீர்ப்பளித்துள்ளது.

இரணைமடு நீர் விநியோகத்திட்டம்; குறித்து கூட்டமைப்பு விசேட கூட்டம்-

untitledதமிழ் தேசிய கூட்டமைப்பினரால் ஒழுங்கமைக்கப்பட்ட விசேட கலந்துரையாடல் ஒன்று அதன் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில்; யாழ். பொதுநூலக மாநாட்டு மண்டபத்தில் இன்றுகாலை 10மணியளவில் ஆரம்பமாகி பிற்பகல்வரை நடைபெற்றுள்ளது. இந்த விசேட பொதுக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். இந்த விசேட கலந்துரையாடலானது இரணைமடு நீர்விநியோகத்திட்டம் தொடர்பில் தீர்வுகளை எட்டுவதற்காகவே கூட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நேற்றையதினம் கூட்டமைப்பின் நாடாளுனமன்றக்குழு தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் கிளிநொச்சிக்கு சென்று விவசாயிகளை நேரடியாக சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

திருவனந்தபுரம் உதவி உயர்ஸ்தானிகரகம் திறந்துவைப்பு-

imagesCA5MP3F3கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இலங்கையின் துணை உயர்ஸ்தானிகரகம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கான உதவி உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள ஜொய்மன் ஜோசப்பிற்கு எதிராக குற்றவியல் வழக்கு காணப்படுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, அங்கு சர்ச்சை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தகவலைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் ரமேஸ் சென்னித்தாலா மற்றும் கேரளாவின் முதலமைச்சர் ஓமன் செண்டிலா ஆகியோரும் இந்த நிகழ்வை புறக்கணித்திருந்தாக இந்திய ஊடகங்ள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியப் பிரதமர் சந்திப்பு-

mahinda manmohan meetஇந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. மியன்மாரில் அடுத்த மாதம் 4ம் திகதி நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டுக்கு சமாந்தரமாக இந்த சந்திப்பு நடைபெறும் என்று, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவு செயலாளர் சுஜாதா சிங் இந்த தகவலை தெரிவித்துள்ளார். இதற்கிடையில் எதிர்வரும் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்குமா? என்று கேள்வி எழுப்பப்பட்டபோது, அதற்கு நேரடியான பதிலை வழங்காத சுஜாதா சிங், அமெரிக்காவின் பிரேரணையை எழுத்து வடிவில் பாராமல் இந்தியா எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளாது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பெண்ணை கடத்திய மூவர் கைது-

malaysiaஇலங்கைப் பெண் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவத்தில் மலேசியாவில் மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கோலாலம்பூரில் உள்ள வங்கசா, மெலாவிட்டி பகுதியில் வைத்து குறித்த பெண் கடத்தப்பட்டார். கடத்தப்பட்ட 20 வயதுடைய இலங்கை பெண் மூன்று நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் அப்பெண்ணை மீட்டுள்ளதாகவும் மலேசிய தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்வி ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடவென குறித்த பெண்ணின் மைத்துனர் முறையான ஒருவர் 8,500 ரிங்கிங் பணத்தை கோரியுள்ளார். எனினும் அந்த பணத்தை கொடுக்க மறுத்ததால் இக்கடத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முற்பகல் வீடொன்றை சோதனையிட்ட பொலிஸார் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணை மீட்டுள்ளனர். அந்த வீட்டிலிருந்து இரு இலங்கையர்களை கைதுசெய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட பின் மூன்றாவது சந்தேகநபரையும் கைது செய்துள்ளனர்.

சீன மீனவர்களால் தொல்லை, வடக்கு மீனவர்கள் கவலை-

china fishermenimagesCA9OSPE3வடகடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய தொழில் முறையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு முடியாதுள்ள நிலையில், சீன மீனவர்களும் தமது கடற்பரப்பில் வந்து தொழில் செய்வதாக வடபகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் உள்ளுர் மீனவர்களின் வாழ்வாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து உரிய அதிகாரிகளிடம் முறையிட்டிருக்கின்ற போதிலும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அந்த மீனவர்கள் கூறுகின்றனர். இந்தப் புதிய தொல்லை யாழ் குடாநாட்டின் வடமராட்சி கடற்பகுதியிலேயே ஏற்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியான்பிள்ளை தெரிவித்துள்ளார். Read more

அமரர் கந்தையா சபாரத்தினம் அவர்களின் நினைவாக உயர்வகுப்பு மாணவர்களுக்கு உதவி-

kadaiahkandaiahdkandaiahskandiaah.யாழ். சித்தன்கேணியில் சித்தன்கேணியூர் அமரர் கந்தையா சபாரத்தினம் (இளைப்பாறிய இறக்குவானை ஓவசியர்) அவர்களின் 100ஆவது பிறந்த தினத்தை ஒட்டி அவரது குடும்பத்தினரால் அப் பகுதியைச் சேர்ந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரம் கற்கும் 10 மாணவர்களுக்கு இரண்டு வருடத்திற்கான கல்விக்கான உதவி வழங்கப்பட்டது. இந் நிகழ்வானது சர்வதேச இந்து குருமார் ஒன்றியத்தின் தலைவர் சபா வாசுதேவக் குருக்களின் ஆசியுடன் 25.02.2014 நேற்று நடைபெற்றது. இதன்போது முதலாவது மாணவருக்கான அறக்கொடையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவான் வழங்கி வைத்து ஆரம்பித்தார் இதனைத் தொடர்ந்து புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பிருமான தர்மலிங்கம் சித்தாத்தன், வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகறஞ்சினி ஐங்கரன், பிரதேச சபை உறுப்பினர் சபாநாயகம் சசிதரன் ஆகியோர் அறக்கொடையை வழங்கி வைத்தனர்.

 

 

அகில இலங்கை சிவாலய தரிசன துவிச்சக்கர வண்டி யாத்திரை

 அகில இலங்கை சிவாலய தரிசன துவிச்சக்கர வண்டி யாத்திர நாளையதினம் 27.02.2014 அதிகாலை சித்தங்கேணி சிவ சிதம்பரேஸ்வரர் ஆலய முன்றலில் சிறப்பு வழிபாட்டுடன் பிரம்மசிறி ஞான. சபாரட்ண சர்மாவின் ஆசியுடன் ஆரம்பமாக உள்ளது. இந் நிகழ்வில் பல துவிச்சக்கரவண்டி ஓட்டங்களில் கலந்து பல பரிசில்களையும் விருதுகளையும் பெற்ற ஜேர்மனியில் இருந்து வருகை தந்துள்ள இராஜா. இரத்தினசிங்கம். குணசேகர மற்றும் சுழிபுரத்தை சேர்ந்த வைத்திலிங்கம் கைலைநாதன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர், இந் நிகழ்வானது 27.02.2014 நாளை காலை 5.30 மணியளவில் சித்தன்கேணி சிவன் கோவில் முன்றலில் ஆரம்பமாகி மானிப்பாய் வீதி ஊடாக மருதனார் மடம் ஆஞ்சனேயர் ஆலய முன்றலூடாக நல்லூரை சென்றடைந்து Read more

ஐ.நா மனித உரிமை ஆணையரின் அறிக்கைக்கு கூட்டமைப்பு வரவேற்பு-

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கையை வரவேற்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவநீதம்பிள்ளையின் அறிக்கையில், அரசியல் கைதிகள் மற்றும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தபட்டுள்ளவர்கள் குறித்த விவகாரம், சிறபான்மையினருக்கு எதிரான செயற்பாடுகள், வடக்கின் இராணுவ குறைப்பு உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த விடயங்களை வரவேற்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு, இதனடிப்படையில் சர்வதேச விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறது. எவ்வாறாயினும் இந்த அறிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

பளை வரையில் யாழ் தேவி பயணிக்க ஏற்பாடு-

கிளிநொச்சியில் இருந்து பளை வரையான ரயில் சேவை 23 வருடங்களுக்கு பின் எதிர்வரும் 4ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்திய இர்கொன் நிறுவனத்தினால் வடபகுதிக்கான ரயில் பாதை துரிதகதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இதன்படி தற்போது கொழும்பிலிருந்து யாழ் தேவி கிளிநொச்சிவரை சேவையில் ஈடுபட்டுள்ளது. எனினும் கிளிநொச்சியில் இருந்து பளை வரையான 21 கிலோமீற்றர் தூர ரயில் பாதையை நிர்மாணிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதோடு பரந்தன், ஆனையிறவு ரயில் நிலையங்களும் மீள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அதன்படி எதிர்வரும் 4ஆம் திகதி உத்தியோகபூர்வமான பளைவரை சேவை இடம்பெறவுள்ளது. இதனை போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம இந்திய உயர் ஸ்தானிகர் சிங்ஹா ஆகியோர் ஆரம்பித்து வைக்கவுள்ளனர்.

அரச வைத்தியசாலைகளில் பணிப்பகிஷ்கரிப்பு-

அரச இருதய சத்திர சிகிச்சை உத்தியோகத்தர்கள் சங்கம் ஆரம்பித்த பணிப் பகிஷ்கரிப்பை தொடர்ந்தும் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலதிக கொடுப்பனவு உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப் பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டதாக சங்கத்தின் செயலாளர் வி.எஸ்.ரி.தர்மரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலை, காலி, கராப்பிட்டி போதனா வைத்தியசாலை மற்றும் கண்டி வைத்தியசாலை ஆகியவற்றில் இந்த பணி ப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகிறது. இதனால் இருதய மாற்று அறுவை சிகிச்சைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன. இதேவேளை, தேசிய வைத்தியசாலையில் திறந்த இருதய சத்திர சிகிச்சையும், மாற்று அறுவை சிகிச்சையும் இடம்பெறவில்லை எனவும், சத்திர சிசிக்சைகளுக்காக காத்திருப்போர் பட்டியில் உள்ள நோயாளர்களுக்கு வேறு திகதிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

மீனவர் பிரச்சினை தொடர்பாக கொழும்பில் பேச்சுவார்த்தை-

இந்தியா மற்றும் இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை கொழும்பில் நடைபெறவுள்ளதாக இலங்கை கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, திருமலை மற்றும் நீர்கொழும்பு பகுதி மீனவர்கள் இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்கவள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இடம்பெற்ற சந்திப்பின்போது, அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் வரையில், தமது மீனவர்கள் கடலுக்கு செல்லமாட்டார்கள் என, இந்திய மீனவர் சங்கங்களின் தலைவர்கள் தெரிவித்திருந்தனர். எனினும், இலங்கையின் கடல் எல்லையை மீறி பிரவேசித்த 91 இந்திய மீனவர்கள் இதுவரையில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இந்திய கடல் எல்லையை மீறிய 25 இலங்கை மீனவர்களும், 5 படகுகளும் இந்திய பாதுகாப்பிரிவின் பொறுப்பிலுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சு கூறியுள்ளது.

யுத்த அழிவுகள் தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட நடவடிக்கை-

யுத்த காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் சொத்துக்களின் சேதம் தொடர்பில், முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் இறுதி அறிக்கையை, அடுத்தமாதம் வெளியிடவுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் புள்ளிவிபரங்களை பரிசீலிக்கும் நடவடிக்கை தற்போது நிறைவுபெற்றுள்ளதாக திணைக்களப் பணிப்பாளர் டி.சி.எ.குணவர்தன குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.

வடக்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் ஆரம்பம்-

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான வடக்கு அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வீதி அபிவிருத்தி அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மூன்று கட்டங்களாக இந்த பணிகள் நடைபெறவுள்ளன. கொழும்பில் இருந்து தம்புல்லை வரையில் அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்பட்டு, தம்புல்லையில் இருந்து யாழ்ப்பாணம் வரையில் ஏ9 வீதியுடன் இணைக்கப்படும். இதற்கு 600 மில்லியன் டொலர்கள் செலவிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

மரணத்துக்கு மாரடைப்பே காரணம்-சிறைச்சாலை ஆணையாளர்-

கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட அரசியல் கைதியின் மரணத்துக்கு மாரடைப்பே காரணம் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். புலிகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தண்டனை பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 42வயதான விஸ்வலிங்கம் கோபிதாஸ் பிரித்தானிய பிரஜையாவார். பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் குற்றம் சுமத்தப்பட்ட இவருக்கு 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது நேற்றுமுன்தினம் சிறைக்குள்ளிருந்து கோபிதாஸின் சடலம் மீட்கப்பட்டது இதன்பின் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போது மரணம் மாரடைப்பால் ஏற்பட்டது என்பது தெரியவந்தது என சிறைச்சாலைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

உலக வங்கியின் ஏற்பாட்டில் யாழ். பொதுநூலகத்தில் கலந்துரையாடல்-

வட மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட கிராமங்கள் மற்றும் சிறு நகர மேம்பாட்டு திட்ட (புற நெகும) வேலைத் திட்டங்களை மதிப்பீடு செய்வதற்கு உலக வங்கியின் நிபுணத்துவக் குழு இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளது. இக்குழு இத்திட்டங்களை நடைமுறைப்படுத்திய உள்ளுராட்சி சபைகளின் தொடர்புடைய உத்தியோகத்தர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடத்தப்படுகின்றது. இக் கலந்துரையாடலில் ஒவ்வொரு உள்ளுராட்சி சபையிலிருந்தும் தவிசாளர், செயலாளர், தொழில்நுட்ப அலுவலர் பெறுகை நிதி உதவியாளர் திட்டம் தொடர்பான உத்தியோகத்தர் சமூக கண்காணிப்புக் குழு ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இக் கலந்துரையாடலில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வளவாளர்களால் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மீனவர் பிரச்சினைக்கு 90 நாட்களுள் தீர்வு-பாரதீய ஜனதா கட்சி-

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்று 90 நாட்களுக்குள் இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தமிழக பாரதிய ஜனதா கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும், மீனவர் பிரச்சினை தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினையில் பாரதிய ஜனதா கட்சி தலைமைக்கும், தமிழக பாரதிய ஜனதா கட்சிக்குமிடையே முரண்பாடில்லை என்றார்.

நாளை மறுதினம் வாக்காளர் அட்டை விநியோகம்-

மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான வாக்காளர் அட்டைகள் நாளை மறுதினம் 28ஆம் திகதி விநியோகிக்கப்படும் என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தபால் மூல வாக்களிப்பு மார்ச் 13ஆம், 14ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. 125,000 அரச உத்தியோகஸ்தர்கள் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

திருமலையில் ஆயுதங்கள் மீட்பு-

திருகோணமலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருமலை முருகாபுரியின் மூன்றாம் மைல்கல் பகுதியிலிருந்து இவ் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. ரி-56 ரக துப்பாக்கிகள் 05, ஒரு இயந்திர துப்பாக்கி, மகசீன்கள், துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய அறிவித்துள்ளார்.

க.மு தம்பிராசாவின் போராட்டத்திற்கு வட மாகாண அமைச்சர் ஐங்கரநேசன், மாகாணசபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் ஆதரவு-

வலி வடக்கு மற்றும் சம்பூர் கிராம மக்களின் மீள்குடியேற்றத்திற்காக மக்களுக்குரிய உறுதிக் காணிகளிலிருந்து உடனடியாக அரச படைகள் வெளியேற வேண்டுமென்றும், உறுதி வழங்கப்பட்ட உலருணவு நிவாரணம் உடனடியாக வழங்கப்பட வேண்டுமென்றும் கோரி அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி க.மு தம்பிராசாவ அவர்களின் காலவரையற்ற தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கடந்த 21.02.2014ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் அவர்களும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களும் க.மு. தம்பிராசாவின் போராட்டத்திற்கு தமது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.  Read more