உடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இன்று (15) முதல் இரண்டு வாரங்களுக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.