கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு இலக்கான மேலும் 6 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி, இன்று முற்பகல் 10 மணி வரை 65 பேர் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

மேலும்,​ கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் 243 பேர் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விசேட வைத்தியசாலையாக இராணுவத்தினரால் புதுப்பிக்கப்பட்ட வெலிகந்த ஆதார வைத்தியசாலை சுகாதார பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுளளது.