கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில்  தற்போது அமுலில் உள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.அதனடிப்படையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (24) காலை 6 மணி வரையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அன்றைய தினம் மாலை 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஏனைய மாவட்டங்களில் அமுலில் உள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.

அத்துடன் அன்றைய தினமே மாலை 2 மணிக்கு மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு 24 ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்பட வேண்டும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு உத்தரவிட்டுள்ளது.