 கொரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து, அதிக அவதானமிக்க பகுதிகளான கொழும்பு, கம்பஹா, களுத்றை, புத்தளம், கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை (16) காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.
கொரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து, அதிக அவதானமிக்க பகுதிகளான கொழும்பு, கம்பஹா, களுத்றை, புத்தளம், கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை (16) காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.
குறித்த பகுதிகளுக்கு பி.ப 4.00 மணிக்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஊரடங்கு நீக்கப்படும் காலப்பகுதியில், அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
