சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று பிற்பகல் இடம்பெற்றது. இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் 2.9 பில்லியன் டொலர் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் 4ஆவது தவணையை வழங்குவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.