இந்திய வௌிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று முற்பகல் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். அவர் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் இதன்போது வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்திப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய வௌிவிவகார அமைச்சருடன் 8 பேர் அடங்கிய தூதுக்குழுவும் நாட்டிற்கு வருகை தந்துள்ளது.