பேருந்தில் பயணிகளிடம் கட்டணம் அறவிட்ட பின்னர் அதற்கான பயணச்சீட்டையும் மிகுதிப் பணத்தையும் வழங்காத நடத்துனர்கள் தொடர்பில் முறைப்பாடளிக்க முடியும் எனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு, குறித்த முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.