பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து முத்திரைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. வழங்கப்பட்டுள்ள அனைத்து முத்திரைகளையும் பாராளுமன்ற தபால் அலுவலகத்திடம் ஒப்படைக்குமாறு தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்காக வருடத்திற்கு 10,000 முத்திரைகள் வழங்கப்படுவதுடன் இவற்றிற்காக 500,000 ரூபா செலவிடப்படுவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.