குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபராக பீ.அம்பாவிலவை நியமிப்பதற்கு தேசிய காவல்துறை ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. குறித்த பதவியில் இதுவரை காலமும் கடமையாற்றிய பிரதி காவல்துறைமா அதிபர் எம்.ஏ.ஆர்.பிரமேரத்ன, மேல் மாகாண வடக்கு பிரிவு பிரதி காவல்துறைமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய காவல்துறை ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.