Header image alt text

கண்ணீர் அஞ்சலி

Posted by plotenewseditor on 19 October 2024
Posted in செய்திகள் 

மட்டக்களப்பில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள், பெண்களுக்கு சரியான முறையில் இட ஒதுக்கீட்டை வழங்கவில்லை என கபே எனப்படும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது. காத்தான்குடியில் உள்ள கபே அமைப்பின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீன் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையிலே நூற்றுக்கு 50 சதவீதம் பெண் வாக்காளர்கள் உள்ளனர். Read more

இந்தியக் கடற்படையின் INS Kalpeni கல்பேனி (T-75) அதிவேகத் தாக்குதல் கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. 70 பேர் கொண்ட இந்தக் கப்பல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் எனவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.