இன்று காலை 10.00 மணிக்கு வவுனியா கோயில்குளம் ஆதி திருமண மண்டபத்தில், கட்சியின் வவுனியா மாவட்ட பொறுப்பாளர் திரு. க. சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் தலைமையில் வவுனியா மாவட்ட தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையேயான சந்திப்பு கட்சியின் ஸ்தாபகர் உமாமகேஸ்வரன் அவர்களின் உருவப்படத்திற்கு விளக்கேற்றல், மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி மற்றும் மௌன அஞ்சலியுடன் ஆரம்பமாகியது.
இதன்போது, கடந்தகால நிலைமைகள், சமகால அரசியல் நிலைமைகள், வருகின்ற பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் எமது கட்சியின் தலைவர் த. சித்தார்த்தன், செயலாளர் ம. பத்மநாதன், தேசிய அமைப்பாளர் ஆ. சிறீஸ்கந்தராஜா, இளைஞர் பிரிவு பொறுப்பாளர் யூட்சன், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர் நா. இரட்ணலிங்கம்,
கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள், மத்தியகுழு உறுப்பினர்கள், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியினுடைய வன்னி தேர்தல் தொகுதியின் எமது கட்சி வேட்பாளர்கள் கந்தையா சிவநேசன், வைரமுத்து திருவருட்செல்வன் மற்றும் ஆதரவாளர்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துருந்தனர்.
