இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாநாயக்க ஆகியோருக்கிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று இந்த சந்திப்பு இடம்பெற்றது. வடக்குக் கடலில் தற்போது நிலவும் கடற்றொழில் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. இதன்படி, ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.
இரு நாடுகளும் எதிர்கொள்ளும் பொதுவான சவால்களை வெற்றி கொள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.